ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சென்னையில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!




இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.ஜி.ஆர். நகர் முதன்மைச் சாலையில், இன்று (10.08.2014) மாலை, ‘சமற்கிருத எதிர்ப்புத் தெருமுனைக் கூட்டம்’ நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் தலைமையேற்றார். த.தே.பொ.க. சென்னை செயலாளர் தோழர் வி.கோவேந்தன், தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். 

தமிழ் வழிபாட்டுரிமைக் குழு அமைப்பாளரும், தெய்வத்தமிழ் இதழ் ஆசிரியருமான ‘செந்தமிழ் வேள்விச் சதுரர்’ திரு. மு.பே.சத்தியவேல் முருகனார், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி ஆகியோர் கருத்துரை நல்கினர். புலவர் இரத்தினவேலவர் திரு. சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். 

நிறைவில், சென்னை த.இ.மு. தலைவர் தோழர் செந்தில் நன்றி நவின்றார். கொட்டும் மழையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், திரளான தோழர்கள் பங்கேற்றனர். 



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.