ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கர்நாடகம் புதிய அணைகள் கட்டும்இடத்தில் மறியல்போராட்டம்!

கர்நாடகம்  புதிய அணைகள் கட்டும் இடத்தில் ஆயிரம் பேர்  பேரணியாகச் சென்று மறியல் போராட்டம்காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு  ஒருங்கிணைப்பாளர் தோழர் பெமணியரசன்அறிவிப்பு!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம்நேற்று(17.11.2014) காலைதஞ்சை செஞ்சிலுவைச் சங்க அரங்கத்தில்நடைபெற்றதுகூட்டத்திற்குக்காவிரி உரிமை மீட்புக் குழுஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார்.

இக்கூட்டத்தில் .தி.மு.துணைப் பொதுச் செயலாளர் திருதுரை.பாலகிருட்டிணன்தமிழர் தேசிய முன்னணிப் பொதுச் செயலாளர்திரு அய்யனாபுரம் சி.முருகேசன்விடுதலைத் தமிழ்ப் புலிகள்நிறுவனத் தலைவர் திருகுடந்தை அரசன்மூன்று மாவட்டவிவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருவலிவலம்முசேரன்தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத்தலைவர் திரு.மணிமொழியன்காவிரிப் பாசன விவசாயிகள்பாதுகாப்பு சங்கத் தலைவர் திருகாவிரி தனபாலன்தமிழகவிவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் திரு...சின்னத்துரைநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்வழக்கறிஞர் நல்லதுரைமீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புஒருங்கிணைப்பாளர் முனைவர் .செயராமன்மனித நேய மக்கள்கட்சி வணிகப் பிரிவுத் தலைவர் திரு கலந்தர்புதிய தமிழகம் கட்சிவழக்கறிஞர் திரு சுகுமார்தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின்தஞ்சை மாவட்டப் பொருளாளர் திரு வாசுதிருத்துறைப்பூண்டி திருநெல் செயராமன்திருவாரூர் திரு ஜிவரதராசன்தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசுதலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன்தோழர் நாவைகறைதோழர் விடுதலைச்சுடர்,திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன்,திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் தனபாலன்உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காவிரிஉரிமை மீட்புக் குழு ஒருங்கிணைபாளர் தோழர் பெ.மணியரசன்பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.

1. ஆடுதாண்டு காவிரி என்று அழைக்கபடும் மேகேதாட்டுப்பகுதியில் 48 .மி.கொள்ளவு கொண்ட இரு அணைகள்காவிரியின் குறுக்கே கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஒருசொட்டு நீர் கூட வரமால் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.உச்ச நீதிமன்றம்காவிரித் தீர்பாயம் ஆகிய நீதித்துறை தலைமைஅமைப்புகளின் ஆணைகளைத் துச்சமாகத் தூக்கியெறிந்துதமிழர்களுக்கு எதிராக இனப் பகையோடு செயல்படும் கர்நாடகஅரசின் இன்னொரு அட்டூழியம் தான் புதிய அணைகள் கட்டும்திட்டம்இரு அணைகளும் கட்டப்பட்டு விட்டால் ஒரு சொட்டுத்தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு உபரி வெள்ளமாக வராமல்கர்நாடக அரசால் தடுக்க முடியும்அதன் பிறகு தமிழ்நாட்டில்24,00,000 ஏக்கர் சாகுபடி நிலம் பாலை நிலம் ஆவதுடன்காவிரியால்குடி நீர் பெறும் 20 மாவட்டங்களில் உள்ள பல கோடி மக்கள் குடி நீர்இன்றி பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள்எனவே தேர்ந்தேடுக்கப்பட்ட ஆயிரம் பேரை ஒகேநக்கலில் இருந்து பேரணியாக அழைத்துச்சென்று ஆடுதாண்டு காவிரியில் அணைக்கட்டும் இடத்தில் மறியல்போராட்டம் நடத்திமக்கள் விரோதத் திட்டத்தைத் தடுத்துநிறுத்துவது என்று ஒரு மனதாகக் காவிரி உரிமை மீட்புக் குழுமுடிவு செய்துள்ளது.

2. ஆடுதாண்டு காவிரியில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடகஅரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து 22.11.2014 அன்றுதிருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு திருவாரூர்நாகை,தஞ்சை மாவட்டங்களில் நடத்தவுள்ள முழு அடைப்புபொதுவேலை நிறுத்தம்தொடர்வண்டி மறியல் போராட்டங்களுக்குக்காவிரி உரிமை மீட்புக் குழு முழு ஆதரவு அளிப்பது என்று முடிவுசெய்யப்பட்டது.

3. தமிழ் மக்களைத் தாக்க உள்ள பேராபத்தை உணர்ந்து கொண்டுஅவசர நடவடிக்கையாக அனைத்துக் கட்சிக் குழுவினரைஅழைத்துக் கொண்டு சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடிஅவர்களைப் பார்த்துப் பேசி புதிய அணைகள் கட்டும் திட்டத்திற்குநடுவண் அரசின் சுற்றுச்சூழல் – வனத்துறையினரும் - நடுவண்அரசின் நீர்ப்பாசனத்துறையினரும்அனுமதியளிக்காமல் தடுத்திடவேண்டும் என்று கோரிக்கை விண்ணப்பம் கொடுத்து அழுத்தம்தரவேண்டும் என்று தமிழக முதல்வர் திரு பன்னீர்ச்செல்வம்அவர்களை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.