ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!

அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.

இந்த அநீதியைக் கண்டித்து, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1 - காரி (சனி) அன்று மாலை, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமையேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் தோழர் வெ.ந.கணேசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், தோழர் பிலால்(எஸ்.டி.பி.ஐ.), தோழர் ரபிக் (இளந்தமிழகம்), தோழர் பேரறிவாளன் (தமிழ்ப்புலிகள்), தோழர் மணிபாவா (தமிழ்நாடு மக்கள் கட்சி), மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, திரு. ஐ.ஜெயராமன் (புரட்சிக்கவிஞர் பேரவை), தோழர் கரிகாலன் (தமிழ்த் தேசியப் பேரியக்கம்), மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அகவன், புனித தேவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.