ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கைது செய்தது தமிழக அரசு !

சென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கைது செய்தது தமிழக அரசு !

மதுக்கடைகளை இழுத்து மூடக்கோரி தமிழகம் முழுவதும் இன்று 04.08.2015 முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மது ஒழிப்பு போராளி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், முழு மதுவிலக்கை செயல்படுத்த வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வணிக நிறுவனங்களை அடைத்து இன்று கடையடைப்பில் ஈடுபட்டுளனர்.

இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் மதுக்கடைகளை மூடக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலை வழியே பேரணியாக சென்ற தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் காவல்துறையினருக்கும் , போராட்டத் தோழர்களுக்குமிடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்டவர்களை காவல்துறைனர் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடைகளை மூடக் கோரி முழக்கங்களை எழுப்பிய தோழர்களில் இருஇளைஞர்களை காவல்துறையினர் தாக்கிக் கைது செய்தனர். அப்பகுதி மதுபானக்கடை உடனே மூடப்பட்டது.
போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல் ஆறுமுகம், தோழர் கோவேந்தன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசே! தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக செயல்படுத்து!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.