ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உழவர் உரிமை - தமிழர் உரிமை : பழ. நெடுமாறன் தலைமையில் முற்றுகை.

உழவர் உரிமை - தமிழர் உரிமை : பழ. நெடுமாறன் தலைமையில் முற்றுகை. 
காவிரி இறுதித் தீர்ப்பை ஒழித்துக்கட்டும் ஒற்றைத் தீர்ப்பாய சட்ட முன்வடிவைத் திரும்பப் பெறவேண்டும், தமிழ் நாட்டில் ஐட்ரோ கார்பன், பெட்ரோல், எரிவாயு, மீத்தேன் உள்ளிட்டவற்றை எடுக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும், தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் இந்தித் திணிப்பை நிறுத்த வேண்டும், மதுரை கீழடி அகழாய் வுப் பணிகளை முடக்கக் கூடாது, மாட்டிறைச்சிகு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, திருச்சியில், இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகத்தை தமிழின அமைப்புகள் 31. 05. 2017 அன்று முற்றுகையிட்டன.
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா. பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் அய் யாக்கண்μ, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு திரு. பி.ஆர். பாண்டியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய் யனாபுரம் சி. முருகேசன், திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், காரைக்குடி அமைப்பாளர் திரு. மாறன், தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் . செயப்பிரகாசு நாராயணன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன், ஓவியர் வீரசந்தனம், புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் பங்கேற்றனர்.




தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில், பேரியக்கப் பொருளாளர் தோழர் . ஆனந்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, பழ. இராசேந்திரன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.. கவித்துவன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன், மகளிர் ஆயம் நடுவண் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் . இலட்சுமி உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
வருமானவரித்துறை அலுவலகம் நோக்கிச் சென்ற தோழர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அனைவரையும் கைது செய் து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். பின்னர் அனைவரும் விடுதலை செய் யப்பட்டனர்.




 


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.