ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கதிராமங்கலம் மக்களை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை. - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை.

கதிராமங்கலம் மக்களை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை. - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
தஞ்சை மாவட்டம் - திருவிடைமருதூர் வட்டம் - கதிராமங்கலம் கிராமத்தைக் கடந்த 02.06.2017லிருந்து தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு ஊருக்குள் தெருக்கள், சந்துகள், திடல்கள் என முற்றிலும் சுற்றி வளைத்து, அக்கிராமத்தின் 2,000 க்கும் மேற்பட்ட மக்களைப் பணயக் கைதிகள் போல் வைத்திருக்கிறார்கள். ஆயிரம் காவல்துறையினரின் முற்றுகைக்குள் அக்கிராமத்தை வைத்துக் கொண்டு, இந்திய எண்ணெய் எரிவளிக் கழகத்தினர் (.என்.ஜி.சி.), எண்ணெய்  மற்றும் எரிவளிக் குழாய் கள் இறக்கும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களில் 500 பேரை 02.06.2017 அன்று கைது செய் து, மண்டபங்களில் வைத்து இரவில் விடுவித்தனர். அதேவேளை அம் மக்களுக்கு ஆதரவாக அங்கு சென்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் . செயராமன், இளைஞர்கள் விசயரங்கன், சீனிவாசன், வழக்கறிஞர் கரிகாலன் மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த உழவர்கள் 6 பேர் என மொத்தம் பத்து பேரை பல்வேறு பிரிவுகளுடன் பிணை மறுப்புப் பிரிவையும் சேர்த்து, வழக்குப்போட்டு குடந்தைக் கிளைச்
சிறைச்சாலையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர்.

கதிராமங்கலத்தில் 2,000 மக்களின் குடிமையியல் உரிமைகளை (Civil Rights) முற்றிலுமாகப் பறித்து, காதணி விழாக்கள் உள்ளிட்ட குடும்ப சடங்கு களைக்கூட சரியாக செய் யவிடாமல் முடக்கி வைத் துள்ளதைக் கண்டித்து, 03.06.2017 அன்று அம்மக்கள் தங்கள் கிராமத்திலுள்ள 93 கடைகளையும் அடைத்துத் துயரத்தை வெளிப்படுத்தினர். மறுநாள் (04.06.2017) அம்மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர். அங்கு முற்றுகை யிட்டுள்ள காவல்துறையினர் கருப்புக் கொடிகளைக் கிழித்து எறிந்து மக்களைமிரட்டியுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த அட்டூழி யங்களுக் கிடையே மிகவும் பாதுகாப் பாக எசமானத் திமிருடன் இந்திய எண்ணெய்  - எரிவளிக் கழக அதிகா ரிகள், எண்ணெய்  மற்றும் எரிவளிக்காக ஆழ்குழாய் களை இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த உரிமைப் பறிப்புகளையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள முடியாத அக் கிராம மக்கள், 05.06.2017 அன்று அக்கிராமத்திலிருந்து வெளியேறி, முள்ளுக்குடி என்ற கிராமத்தில் கூட்டமாக அமர்ந்து போராடினர்.

ஊரைவிட்டு காவல்துறையினர் உடனடியாக வெளியேற வேண்டும், இந்திய எண்ணெய்  எரிவளிக் கழக அதிகாரிகள் நடத்தும் ஆக்கிரமிப்புப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து, அம்மக்கள் முள்ளுக்குடியில் முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில் திருவிடைமருதூர் சார் ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அம்மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகையை விலக்கினர்.

கதிராமங்கலத்தில் கையாண்ட காவல் முற்றுகை எண்ணெய்  எரிவளிக் குழாய்  இறக்கும் செயல் திட்டத்தை, நெடுவாசல் - வடகாடு போன்ற பகுதிகளுக்கான வெள்ளோட்டமாகவே கருத வேண்டியுள்ளது.

இந்திய அரசின் அடியாள் போல் தமிழ்நாடு அரசு செயல்படுவதைப் பார்த்தால், மேற்கு வங்கத்தில் அன்றிருந்த ஆட்சியாளர்கள் தங்களின் அதிகாரத் திமிரால் நந்திகிராமம், சிங்கூர் உழவர்களை காவல்துறையை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி வன்செயல்களை அரங்கேற்றி மக்களை பலியிட்ட அதே அடக்குமுறை களை தமிழ்நாடு அரசும் செய்யுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையின் முற்றுகைக்குள் அகப்பட்டு - குடிமையியல் உரிமைகள் பறிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக 04.06.2017 மாலை தஞ்சாவூரிலிருந்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நானும் மற்றும் நிர்வாகிகளும் இருகார்களில் கதிராமங்கலம் நோக்கிச் சென்ற போது, குடந்தையை அடுத்த கருப்பூர் நாற்சாலை ரவுண்டானாவில் காவல்துறையினர் எங்களைப் பலவந்தமாக வழிமறித்துக் கைது செய்தனர்.

கதிராமங்கலம் முற்றுகை ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தஞ்சை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 19 _ குடிமக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமை மற்றும் சனநாயக உரிமைகளை தடுப்பதிலும், பறிப்பதிலும் தன் அலுவல் கடமைக்கு அப்பாற்பட்டு தீவிரம் காட்டுகிறார்.

இந்திய எண்ணெய்  மற்றும் எரிவளிக் கழகம் காவிரி டெல்டா மாவட்டங்களின் விளை நிலங்களில் புதிதாகக் குழாய் கள் இறக்குவதைப்பழுது பார்த்தல்என்ற சாக்கில் தந்திரமாகப் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு உடனடியாக தமிழ்நாடு முதல்வர் தடை விதித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தமிழர் மரபுவழி வேளாண் அறிவியலாளர் ஐயா கோ. நம்மாழ்வார் தொடங்கி வைத்த மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம், காவிரி டெல்டா மாவட்டங்களில் மாபெரும் மக்கள் இயக்கமாய்  வளர்ச்சியடைந்த போது, அன்றைய முதலமைச்சர் செயலலிதா அவர்கள், மக்கள் உணர்வை மதித்து மீத்தேன் எடுக்கத் தடை ஆணை போட்டார்.

மராட்டிய மாநிலம் செய் தாப்பூரில் அணுமின் ஆலைக்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வந்த போது, அங்கு அணு உலை கூடாது என்று மக்கள் போராடினர். அப்போதிருந்த மராட்டிய மாநிலக் காங்கிரசு ஆட்சி, மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து செய் தாப்பூர் அணு உலைத் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. அவ்வாறே அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டாவின் நஞ்சை நிலங்களில் பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுக்கப்பட்டு வரும் பல ஊர்களில், நிலத்தடி நீர் நஞ்சாகி _- வயல் வெளியும் சாகுபடிக்குத் தகுதியற்ற இரசாயன தரிசுகளாக மாறின. குடிநீருக்கும் வழி இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த அவலங்களைப் பார்த்த அனுபவத்தில் காவிரி டெல்டா மக்கள் எண்ணெய்  எரிவளிக் கழகம் பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுப்பதை கைவிடக் கோரிப் போராடி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு இந்த உண்மையையும் மக்களின் இந்த உணர்வையும் புரிந்து கொண்டு, விளை நிலங்களில் எண்ணெய்  மற்றும் ஐட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவளி ஆகியவற்றை இந்திய எண்ணெய்  எரிவளிக் கழகம் எடுக்கத் தடை விதித்திருக்க வேண்டும். மாறாக, மக்கள் மீது தமிழ்நாடு அரசு போர் தொடுக்கிறது!

கதிராமங்கலத்தில் எண்ணெய்  எரிவளிக் கழகம் எரிவளிக் குழாய் கள் பதிப்பதை சனநாயக வழியில் எதிர்த்த மக்களை தமிழ்நாடு அரசு கைது செய் வதும், அவர்களில் முன்னோடிகளாக உள்ளவர்களை சிறையில் அடைப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்!

மக்கள் மீது அடக்குமுறை ஏவுவது, தொடக்கத்தில் ஆட்சியாளர்களுக்கு சுகமாகவே இருக்கும். பின்னர் அதுவே அவர்களுக்கு சோகமாக மாறிவிடும் என்பதுதான் வரலாறு தந்துள்ள பாடம்! நரேந்திர மோடி அரசு மகிழத்தக்க வகையில் தமிழ்நாட்டு மக்கள் மீது அடக்குமுறை ஏவுவது சனநாயகமற்ற எதேச்சாதிகார நடவடிக்கை மட்டுமின்றி, தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்ளும் செயலாகவும் அமையும். இந்த அடக்கு முறைப் பாதையை தமிழ்நாடு முதலமைச்சர் கைவிட வேண்டும்.


இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாடு அரசு தன்னுடைய தமிழ் மக்களுடன் நிற்க வேண்டுமே தவிர, கார்ப்பரேட் நலனுக்காக உள்ள நடுவண் அரசின் கங்காணியாகச் செயல்படக்கூடாது!

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 சூன் 16-30 இதழில் வெளியானது)


தலைமைச் செயலகம், 

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.