ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தோழர் கோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம்!

தோழர் கோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம்!
மூத்த பொதுவுடைமைவாதியும், மார்க்சிய அறிஞரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) தமிழ்நாடு செயலாளருமான தோழர் கோவை ஈசுவரன் அவர்கள், நேற்று (02.07.2017) மாலை சென்னையில், உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

சென்னை நந்தனத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு, மா.லெ. மக்கள் விடுதலை தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஜெ. சிதம்பரநாதன், தமிழக மக்கள் முன்னணித் தலைவர் தோழர் அரங்க. குணசேகரன், வழக்கறிஞர் அஜிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், இடதுசாரி இயக்கத் தோழர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் மலர் மாலை வைத்து, தோழருக்கு வீரவணக்கம் செலுத்தி, அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் உரையாற்றினார்.

தோழர் கோவை ஈசுவரன் அவர்களின் பன்முகப் பங்களிப்பு குறித்தும், தன் குடும்பத்தையே பொது வாழ்வில் ஈடுபடுத்தி அவர் வழிகாட்டியாக விளங்கியது குறித்தும் தோழர் கி.வெ. குறிப்பிட்டுப் பேசினார்.

பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தோழர் கண்ணன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

இன்று (02.07.2017) மாலை, அவரது உடல் நந்தனம் இல்லத்திலிருந்து அவரது இறுதி வணக்க ஊர்வலம் புறப்படுகின்றது.

தோழர் கோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: tamizhdesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.