ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“வரி கொடுப்பதில் முதலிடம்.. நிவாரணத்தில் வஞ்சிகப்படும் தமிழகம்!” ஜூனியர் விகடன் வார ஏட்டில்... அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

“வரி கொடுப்பதில் முதலிடம்..நிவாரணத்தில் வஞ்சிகப்படும் தமிழகம்!” ஜூனியர் விகடன் வார ஏட்டில்...அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!


தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு சுரண்டிச் செல்லும் வரி வருமானம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டங்களின்படி தமிழ்த்தேசியப் பேரியக்கம் திரட்டிய தகவல்கள், 27.05.2018 நாளிட்ட “ஜூனியர் விகடன்” ஏட்டில் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, அச்செய்திக்கட்டுரையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி கூறியுள்ளதாவது :

“ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்படும்போது, நாம் கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு ஒதுக்குவதே கிடையாது. ஆனால், நம்மிடமிருந்து அதிக அளவிலான வரிப்பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். உற்பத்தி வரி, சுங்க வரி (ஏற்றுமதி), சுங்க வரி (இறக்குமதி), சேவை வரி, நிறுவன வரி, தனிநபர் வருமான வரி இவற்றின் மூலம் ஆண்டுக்கு 1.5 இலட்சம் கோடி மத்திய அரசுக்குப் போகிறது. இது மட்டுமல்லாமல் என்.எல்.சி., தென்னக இரயில்வே, சேலம் உருக்காலை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், தபால் நிலையச் சேவைகள் போன்றவற்றின் மூலமாகவும் வரி போகிறது.

ஆனால், இயற்கைப் பேரிடர்க் காலங்களில் நமக்கு மத்திய அரசு கைகொடுப்பதில்லை. 2013 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் வெள்ளம் ஏற்பட்டபோது அம்மாநிலம் கேட்பதற்கு முன்பே ரூபாய் 1,000 கோடியை உடனடி நிவாரணத் தொகையாக வழங்கியது மத்திய அரசு! உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நம்மைவிட பல மடங்கு பாதிப்பு குறைவு. ஆனால் மத்திய அரசு கொடுத்த உடனடி நிவாரணத் தொகை ரூபாய் 2,875 கோடி. இதேபொல மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் நிவாரணத் தொகையை மத்திய அரசு வாரி வாரித் தருகிறது.

ஆனால், நாம் மொத்த பணத்தையும் மத்திய அரசுக்குக் கொடுத்துவிட்டு நமது உரிமைக்காகவும் உதவிக்காகவும் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கிறோம்”.

இவ்வாறு தோழர் அருணபாரதி கூறியுள்ளார்.

முழுவதுமாகப் படிக்க :
https://www.vikatan.com/…/141165-tamil-nadu-is-deceived-in-…

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com  
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.