ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கல்லாக்கோட்டை மதுஆலை மூடும் மகளிர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது!


கல்லாக்கோட்டை மதுஆலை மூடும் மகளிர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது!

கல்லாக்கோட்டையில் கால்ஸ் மதுபான ஆலையை எதிர்த்து மகளிர் ஆயம் சார்பில் மகளிர் முற்றுகை போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

கல்லாக்கோட்டை சாராய ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட மகளிர் ஆயம் தோழர்கள் முடிவு செய்திருந்த நிலையில் ஆலையின் முன்பு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கல்லாக்கோட்டை கடை வீதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட மகளிர் ஆயம் தோழர்களை ஆலையின் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது கொளுத்தும் வெயிலையும் பாராமல் மகளிர் ஆயம் தோழர்கள் - பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் என அனைவரும் சாலையிலேயே அமர்ந்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி இருந்தபோது காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனத்தில் அனைவரையும் ஏற்றினர்.


போராட்டத்திற்கு மகளிர் ஆயம் தலைவர் தோழர் லட்சுமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் அருணா, துணைப் பொதுச் செயலாளர் தோழர் செம்மலர், துணைத் தலைவர் தோழர் மேரி உள்ளிட்ட திரளான மகளிர் ஆயம் தோழர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர் 300 பேர் கைது செய்யப்பட்டு தற்போது கந்தர்வக் கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.








தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.