ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஈழத்தமிழரை ஏமாற்றியதே 13ஆவது திருத்தம்! குமுதம் ரிப்போர்ட்டர்” ஏட்டில் பெ. மணியரசன் செவ்வி!


ஈழத்தமிழரை ஏமாற்றியதே
13ஆவது திருத்தம்!

“குமுதம் ரிப்போர்ட்டர்” ஏட்டில்
ஐயா பெ. மணியரசன் செவ்வி!

“ஈழத்தமிழரை ஏமாற்றியதே 13ஆவது திருத்தம்!” என “குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டுக்கு அளித்த செவ்வியில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

“மோடியின் அரவணைப்பில் கோத்தபய!” என்ற தலைப்பில் 06.12.2019 நாளிட்ட “குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டில் வந்துள்ள செவ்வியில் ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளதாவது :

"கடந்த 27.7.1987 அன்று இந்தியத் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியும், இலங்கை அதிபர் செயவர்த்தனாவும் செய்து கொண்ட இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, அரசியலமைப்புச் சட்டம் 13ஆவது திருத்தத்தை அமலாக்க வேண்டும் என்று சொன்னது இந்தியா. ஆனால், சுதுமலையில் நடைபெற்ற கூட்டத்தில் புலிகள் தலைவர் பிரபாகரன், “இது (இந்திய இலங்கை ஒப்பந்தம்) தமிழர் பிரச்சினைக்குத் தீர்வல்ல, சிங்கள இனவாத பூதம் இதை விழுங்கிவிடும். தமிழீழ தனி அரசே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு” என்றார். அந்தப் பதின்மூன்றாவது திருத்தத்தில் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு இல்லை. மாகாண அரசுக்குக் காவல்துறை அதிகாரம் கிடையாது. காவலர்கள் அனைவரும் சிங்களக் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இயங்குவார்கள். நிலம் வாங்குவதும், விற்பதும் மாகாண அரசின் கட்டுப்பாட்டில் வராது.

இலங்கையில் ஒற்றையாட்சிதான், கூட்டாட்சி கிடையாது. திரையரங்கு வரி, வீட்டு வரி வசூலிக்கலாம். அதைச் செலவு செய்ய சிங்கள ஆளுநர் ஒப்புதல் அவசியம். மத்திய அரசு எப்போதாவது மாகாண அரசுகளுக்கு நிதி ஒதுக்கும். அது ஒன்றுதான் நிதி ஆதாரம். எனவே, 13ஆவது சட்டத் திருத்தம் என்பது ஏமாற்று வேலை. ஆனால், அதைக்கூட ஆதரிப்பதாக வெளிப்படையாக கோத்தபய சொல்லவில்லை என்பது வேதனையான விஷயம். அவர் தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியம்?”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.