ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஐயா துளசி ஐயா வாண்டையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! - பெ. மணியரசன் அறிக்கை!



ஐயா துளசி ஐயா வாண்டையார் 
மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் 
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!


“கல்விக் காவலர்” துளசி ஐயா வாண்டையார் அவர்கள், நேற்று (17.05.2021) காலமான செய்தி, துயரமளிக்கிறது. தனிநபர் பண்பாடு, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கியவர். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். 

கல்விக் கொள்ளை கடல் போல் சூழ்ந்துள்ள தமிழ்நாட்டில், கல்வி வள்ளல் நிறுவனத் தீவாக பூண்டி புட்பம் கல்லூரியை நடத்தி வந்தவர். பல தலைமுறையாக ஏழை எளிய ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இலவசக் கல்லூரிக் கல்வியைப் பெற வாய்ப்பளித்தார்கள். 

ஐயா அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.