ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே - அவினாசி பகுதியில் தெரு முனை விளக்கக் கூட்டம்








இன்று (3.7 .2022) மாலை அவினாசி பகுதியில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நம் அவினாசி கிளை செயலாளர் அண்ணன் செவ்வியின் வரவேற்புரை வழங்கினார், திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் ஸ்டீபன் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.தலைமை‌ செயற்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து சிறப்புரை வழங்கினார். தமிழ்நாட்டு வணிகர் சங்கங்களின் பேரவையின் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் ஐயா இராசேந்திரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.                        நாம் தமிழர் கட்சியின் தோழர்  கரிகாலன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கேட்டுக்கொண்டிருந்த பொது மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை கொடுத்ததோடு நம் அமைப்பு தோழர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர்.                                   அவினாசி மக்களின் ஆதரவுடன் மிக சிறப்பாக திருப்திகரமாக கூட்டம் நிறைவுப் பெற்றது...

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.