இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும்! சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை!
இனங்களின் கூட்டரசாக இந்தியாவை
மாற்றியமைக்க வேண்டும்!
சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய
எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை!
இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும் என சென்னையில் இன்று (18.08.2026) தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியோடு நடைபெற்றது.
இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களுக்குக் குடியுரிமை கொடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டும், நாகாலாந்து - அருணாச்சலப்பிரதேசம் – மிசோரம் - மணிப்பூர் மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழ்நாடு அரசுக்கும் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்க - மறுக்க “உள்நுழைவு அனுமதி வழங்கும் அதிகாரம்” (Inner Line Permit) வேண்டும், இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும், வரி வசூல் அதிகாரம் முழுவதும் மாநில அரசிடமே இருக்க வேண்டும், கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் முதலிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், இன்று (18.08.2026) செவ்வாய் காலை 10 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையேற்றுப் பேசினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் நா. வைகறை, கோரிக்கை முழக்கங்களை எழுப்ப. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூடிநின்ற தோழர்கள், அதனை விண்ணதிர உணர்வோடு எதிராலித்தனர்.
"ஆரியத்துவ ஒற்றை ஆட்சி முறையினைத் திணிக்காதே!", “மொழி இன அடையாளத்தை அழிக்காதே!”, “இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றிடு!”, “தமிழருக்குத் தன்னரசு! இனங்களின் கூட்டரசு! தமிழ்நாட்டில் தன்னரசு! இந்தியாவில் கூட்டரசு! தமிழ்நாட்டுக்கு அதுவே தேவை!”, “படைத்துறை - தகவல் தொடர்பு - வெளிநாட்டுறவு - பண அச்சடிப்பு நான்கு துறை அதிகாரம் மட்டும் இந்திய அரசுக்கு போதும்! மற்ற அதிகாரங்கள் அனைத்துமே மாநில அரசுக்கு வேண்டும்! வேண்டும்!” என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பேரியக்கத் துணைத் தலைவர் திரு. க. முருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் தோழர் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் செம்மலர்ச்செல்வி ஆகியோர் ஆர்ப்பாட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.
தமிழர் தன்னுரிமைக் கழகத் தலைவர் பாவலர் இராமச்சந்திரன், பாவலர் கீர்த்தி, தமிழின உணர்வாளர் திரு. அ. பத்மநாபன், அம்பத்தூர் தாய்த்தமிழ்ப் பள்ளித் தாளாளர் திரு. சிவ. செந்தமிழ்வாணன், புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் திரு. கோ.அ. செகநாதன், ஆறாம் திணை மக்கள் இயக்கத் தலைவர் திரு. செகதீசன், உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி தலைவர் பாவலர் தமிழுலகன், திரு. வேலு சுபராசன் (உலகத் தமிழ் இயக்கம்) உள்ளிட்ட தோழமை அமைப்புத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உடன் நின்றனர்.
பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் சென்னை வெற்றித்தமிழன், தஞ்சை பழ. இராசேந்திரன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி, திருச்சி வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், பூதலூர் பி. தென்னவன், புதுச்சேரி இரா. வேல்சாமி, குடந்தை க. விடுதலைச்சுடர், சாமிமலை க. தீந்தமிழன், மதுரை கதிர்நிலவன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா, பொதுக்குழு தோழர்கள் சிதம்பரம் வேந்தன் சுரேசு, கோவை பாலகுமரன், ஈரோடு குமரேசன், உடுமலைப்பேட்டை இராசேசு, தொரவி முருகன், சீர்காழி அரவிந்தன், சென்னை பழ.நல். ஆறுமுகம், அம்பத்தூர் செயலாளர் தோழர் அன்புகிட்டு, ஆவடி செயலாளர் தோழர் சுப்பிரமணியன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், சைதாப்பேட்டை செயலாளர் தோழர் முகிலன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் அமுதன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பாவலர் முழுநிலவன் உள்ளிட்ட தமிழ்நாடு – புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பேரியக்கத் தோழர்களும், நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் பேரெழுச்சியோடு பங்கேற்றனர்.
இந்திய அரசே!
இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்று!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Leave a Comment