ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உயிர்த்தெழு(கவிதை) - காசி ஆனந்தன்

உயிர்த்தெழு
- காசி ஆனந்தன் -

திட்டு நீ என்னை ஆங்கிலம் கலந்து
தீந்தமிழ் அழிய நான் வாழ்ந்தால்
கட்டு நீ செருப்பு மாலை என் கழுத்தில்
காறி என் முகமிசை உமிழ்வாய்
வெட்டு நீ என்றன் நாக்கினை! ஊ¡¢ல்
வெறுத்தெனை ஓர்புறம் ஒதுக்கு
கொட்டு நீ முரசம் இவன் தமிழ்த் தாயின்
குரல்வளை அறுத்தவன் என்றே

தாய்மொழி அழிப்போன் யாரானால் என்ன ?
தலைவனே ஆயினும் தாக்கு !
தமிழனாய் இருப்பின் இனியதாய் மொழியாம்
தமிழுக்கு நஞ்சுவைப் பானோ ?
தமிழ்மொழி பழித்தான் ! ஆங்கிலம் களித்தான் !
தறுதலை ! இவனென்ன தமிழன் ?
தமிழனா ? இல்லை ! வெள்ளையன் பிள்ளை !
தமிழன் போல் நம்மிடை வாழ்ந்தான் !

வடமொழி கலந்தான்.. கன்னடன் ஆனான் !
மலையாளி தெலுங்கனாய்ப் போனான் !
அட ! இன்று தமிழன் ஆங்கிலம் கலந்தான்..
கடல்பொங்கி அழித்தும் அழியாத தமிழை
கண்காணத் தமிழனே அழித்தான் !
கெடல் ஒன்றே கொள்கை என வாழ்ந்தான்.. தமிழன்
கெட்டானே... கெட்டானே... கெட்டான் !

அன்னையின் பாலைச் சுவைத்தவன் இந்நாள்
அயல்நாட்டான் காலைச் சுவைத்தான் !
தன்னை இவனேதான் தாழ்த்தினான் . கொடியன்
தமிழ்வாயில் ஆங்கிலம் வைத்தான் !
சென்னையா ? இல்லை லண்டனா ? தெருவில்
செந்தமிழ் தொலைத்தானே.. அடிமை!
முன்னையத் தமிழன் எங்கடா போனான் ?
முயல்கிறேன்.. முகவா¢ இல்லை !

வேங்கையே ! வாடா வெளியில் வா ஓங்கி
வீசு நீ புயலாக வீசு !
தீங்கு செய் கொடியர் தமிங்கிலார் தீட்டும்
திட்டங்கள் துகள்படச் செய்யவாய் !
ஆங்கிலப் பள்ளி அடிக்கல்லை அள்ளி
அடுப்பாக்கு ! சமையலுக் குதவும் !
தாங்கடா தமிழை ! தோள்தட்டி எழுக !
தமிழினம் உயிர்த்தெழல் வேண்டும்.

நன்றி : தமிழர் கண்ணோட்டம் இதழ்.

2 comments:

  1. Vankkam,

    Ithu Oru Sothanai Muyarchi,

    Arunabharathi, Naan Ekalappai Download Seythuvitten, Aanaal ennal Tamilil Adikka Mudiyavillai

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.