ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆவடியில் குவிந்த வட இந்தியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! த.தே.பொ.க உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது


ஆவடி இந்தியப் அரசுப் பாதுகாப்புத் துறை நிறுவனப் பணி வாய்ப்பில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்ககளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க உள்ளிட்ட பல்வேறு அமைப்பு தோழர்கள் 30 மேற்பட்டோர் கைதுசெய்யபட்டுள்ளனர்.

சென்னை ஆவடியில் இந்திய அரசு பாதுகாப்புத்துறை நிறுவனம் (OCF) செயல்பட்டுவருகிறது. இதில் தையல் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புத் தேர்வு இன்று நடைபெற்றது.

வேலை வாய்ப்பு பணித்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட 1800 பேரில் 1026 பேர் தமிழர்கள் அல்லாத, மலையாளிகள், கன்னடர்கள், மேற்குவங்கம், பீகார், மாகாராஷ்ட்டிராவை சேர்ந்த வடஇந்தியர்கள்.

தமிழ் நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனத்தில் தமிழர்களைப் புறக்கணித்து மறைமுகமாக ஆயிரக்கணக்கான வடநாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் இந்திய அரசின் இந் நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழ் நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 80% இட ஒதுக்கீடு தமிழர்களுக்கு வழங்க கோரியும் இன்று (08.12.203 ) காலை 10.30 மணிக்கு சென்னை ஆவடியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆவடி அண்ணாசிலையருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதை கமுக்கமாக அறிந்த காவல்துறையினர் நூற்றுக்கணக்கான காவல்துறையினரை அங்கு குவித்தனர்.

கடைகள், சாலையோரம் என நின்றிருந்தவர்களை அச்சுருத்தும் விதமாக விசாரித்து ஆர்ப்பாட்டத்தை நடைபெறவிடாமல் தடுக்க காவல்துறையினர் கடும் நெருக்கடியளித்தனர்.
முன்னதாக வந்திருந்த தமிழக இளைஞர் முன்னணி தோழர்களை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்னரே வலுக்கட்டாயமாக கைது செய்து வண்டியில் ஏற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்க்குழு உறுப்பினர் தோழர்.க.அருணபாரதி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திரு இராச .முருகன், நாம் தமிழர் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் திரு நா.முகிலன் ம.தி.மு.க நகர செயலாளர் திரு இணையதுல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆதவன், தி.க மாவட்டத் தலைவர் முருகன், தமிழர் தன்மானப் பாசறை அமைப்பாளர் திரு, திருநாவுக்கரசு, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தோழர்கள் காவல்துறையினரால் வலுக்க்கட்டாயமாக கைது செய்துசெய்யப்பட்டனர்.

அப்போது காவல்துறையினருக்கும் தோழர்களுக்குமிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. “வெளியேற்று வெளியேற்று, இந்திக்காரர்களை வெளியேற்று,! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடு” என்று அப்போது முழக்கங்கள் எழுபப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க சார்பில் சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் இளங்குமரன், பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி கிளை செயலாளர் தோழர்.வி.கோவேந்தன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள இராஜா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு மாலை 06.00 மணியளவில் விடுதலை செய்தனர்.
960092_499801306800625_2128856155_n
1426513_499799620134127_726610020_n
1459749_499811753466247_1408311422_n
1459850_499811710132918_726979559_n
1461234_499800136800742_1512321176_n
1463949_499804780133611_671394000_n
1465196_499794763467946_1870592226_n (1)
1465196_499794763467946_1870592226_n
1468564_499804613466961_391541235_n
1471403_499804536800302_2124728176_n
1472887_499801263467296_90284318_n
1479288_499794720134617_1517472878_n
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.