ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை உடனே இறக்குக ! தமிழக உழவர் முன்னணி கோரிக்கை


உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை உடனே இறக்குக ! தமிழக உழவர் முன்னணி கோரிக்கை

இது குறித்து தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

முல்லைப் பெரியாறு அணையில்  142 அடி வரை நீர் தேக்கிக் கொள்ளலாம் எனவும் கேரள அரசு  முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றி இடிக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் செல்லாது எனவும், உச்ச நீதிமன்றம் இன்று (7.05.2014) அளித்துள்ள தீர்ப்பை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது.

உடனடியாக முல்லைப்பெரியாறு அணையில் மதகுகளை 142 அடி நீர் தேக்கும் வகையில் இறக்குமாறு தமிழக பொதுப்பணித்துறைக்கு ஆணையிடுமாறு தமிழக அரசை தமிழக உழவர் முன்னணி  வலியுறுத்துகிறது, இல்லையேல் 2006 ல் தீர்ப்பு வந்தபோது செயல்படாததால் ஏற்பட்ட இழப்பை மீண்டும் சந்திக்க நேரிடும்.

ஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அணையின் மதகுகளை இறக்கி 142 அடி நீர் தேக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக உழவர் முன்னணி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.