ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பெண்களை இழிவுபடுத்தும் ஆபாசப் பாடல் எழுதி வெளியிட்ட நடிகர் சிம்பு - அனிருத் படம் எரிப்பு!

பெண்களை இழிவுபடுத்தும் ஆபாசப் பாடல் எழுதி வெளியிட்ட நடிகர் சிம்பு - அனிருத் படம் எரிப்பு! தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் ஆவேசம்!

பெண்களை இழிவுபடுத்தும் ஆபாசப் பாடல் எழுதிய நடிகர் சிம்பு - இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரைக் கண்டித்தும், அவர்களைக் கைது செய்ய வேண்டுமெனக் கோரியும், தஞ்சையில் இன்று (18.12.2015) காலை மகளிர் ஆயம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு, மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர் தோழர் ம. லெட்சுமி தலைமை தாங்கினார்.


ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சிம்புவையும், அனிருத்தையும் தமிழ்நாடு அரசு கைது செய்யக் கோரியும், சிம்புவின் படத்தை எரித்தும் செருப்பால் அடித்தும் மகளிர் தோழர்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை நகரம் - அமுதா, ராணி, ச.செல்வி, பு.இலட்சுமி, கலைவாணி, பூதலூர் ஒன்றியம் - கே.மீனா, க.செல்வி, சு.சுதாவணி, தெ.ரஞ்சணி, செ. சாந்தி, சி.பிரியா, சி.தமிழ் இலக்கியா, ஜோஸ்பின் மேரி உள்ளிட்ட திரளான மகளிர் தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு அரசே! பெண்களை இழிவுபடுத்தும் நடிகர் சிம்பு - அனிருத் இருவரையும் கைது செய்து சிறையிலடை!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.