ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தாயகம் திரும்பிய தலைவர் மணியரசனுக்கு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு!

தாயகம் திரும்பிய தலைவர் மணியரசனுக்கு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு!
கடந்த 08.10.2016 அன்று வட அமெரிக்காவில் நடைபெற்ற "உலகத் தமிழ் அமைப்பின்" - வெள்ளி விழா மாநாட்டில், தமிழ்நாட்டுத் தமிழரின் உரிமைப் போருக்கு உலகத் தமிழரின் பங்களிப்பு அவசியம் என்பதை சிறப்பான முறையில் எடுத்தியம்பி உரையாற்றிய, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள, நேற்று (14.10.2016), தாயகம் ( தமிழ்நாடு ) திரும்பினார்.
நேற்று இரவு 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய, தலைவர் மணியரசன் அவர்களுக்கு, செஞ்சட்டை அணிந்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தமிழின உணர்வாளர் திரு. செ. அண்ணாதுரை, சென்னை விமான நிலைய பிரிபெய்டு டாக்சி ஓட்டுநர்கள் சங்கச் செயலாளர் திரு. சுகுமார் ஆகியோர், தலைவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி, பொதுக்குழு தோழர் இளங்குமரன், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் ஏந்தல், முழுநிலவன், நல்லசிவம், ரமேசு, கண்ணன், வழக்கறிஞர் இளவரசன், வீரத்தமிழா, சத்தியா, அருவி உள்ளிட்ட திரளான தோழர்கள் விமான நிலையம் வந்திருந்து தலைவரை வரவேற்றனர்.



தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.