ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தொடர்ந்து தமிழர் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து. . . தமிழர் ஒத்துழையாமை இயக்கம் . . .! சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய விளக்கத் தெருமுனைக் கூட்டங்கள் !

தொடர்ந்து தமிழர் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து. . . தமிழர் ஒத்துழையாமை இயக்கம் . . .! சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய விளக்கத் தெருமுனைக் கூட்டங்கள் !
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து காவிரிச் சிக்கலிலும், பிற சிக்கல்களிலும் தொடர்ந்து தமிழர் உரிமைகளை மறுத்து வரும் இந்திய அரசுக்கு எதிராக நடைபெறும் “தமிழர் ஒத்துழையாமை இயக்கம்” குறித்த விளக்கத் தெருமுனைக் கூட்டங்கள், சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், நவம்பர் 5 - 6 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
கூட்டங்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் தலைமை தாங்கினார். தமிழக மாணவர் முன்னணி செயல்பாட்டாளர்கள் தோழர் தமிழ் மாறன், தோழர் நிகரன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி ஆகியோர் இக்கூட்டங்களில் சிறப்புரை நிகழ்த்தினர்.
எம்.எம்.டி.ஏ. நகர்

சென்னை எம்.எம்.டி.ஏ. நகர் பால் பூத் அருகில் 05.11.2016 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை த.தே.பே. நடுவண் கிளைத் தோழர் செ. ஏந்தல், தோழர் வி. கோவேந்தன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். வடசென்னை த.தே.பே. செயலாளர் தோழர் க. செந்தில்குமரன் முன்னிலை வகித்தார்.


எம்.ஜி.ஆர். நகர்
சென்னை எம்.ஜி.ஆர் நகர் - நல்லதம்பி தெரு சந்திப்பில்,
05.11.2016 மாலை 7 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில், உலகத் தமிழ்க் கழகம் புலவர் இரத்தினவேலவர், சென்னை த.தே.பே. நடுவண் கிளைத் தோழர் வி. கோவேந்தன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். சென்னை நடுவண் கிளைத் தோழர் செ. ஏந்தல் நன்றி கூறினார்.
குன்றத்தூர்

சென்னை - குன்றத்தூர் பேருந்து நிலையம் எதிரில்,
06.11.2016 மாலை 4 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் பிரகாசு பாரதி, சென்னை விமான நிலைய டாக்சி ஓட்டுநர்கள் சங்கச் செயலாளர் திரு. மா.வே. சுகுமார் ஆகியோர் விளக்க உரையாற்றினர். தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன் நன்றி கூறினார்.
பல்லாவரம்

சென்னை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில்,
06.11.2016 மாலை 7 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை விமான நிலைய டாக்சி ஓட்டுநர்கள் சங்கச் செயலாளர் திரு. மா.வே. சுகுமார், தமிழக இளைஞர் முன்னணித் தோழர் வீரத்தமிழா ஆகியோர் விளக்க உரையாற்றினர். த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் நன்றி கூறினார்.
திரளான பொது மக்களும் தமிழின உணர்வாளர்களும் பங்கேற்ற இக்கூட்டங்கள், அப்பகுதி மக்களிடையே தமிழர் ஒத்துழையாமை இயக்கம் குறித்த விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.






தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 98408 48594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/TamilsBoycottGovtOfIndia

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.