ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் சௌந்திரசோழபுரம் செங்கள நினைவிடத்தில் 16.05.2017 அன்று மாலை 6 அளவில “தமி்ழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்வு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னதாக புலவர் கலியபெருமாள், புலவர் மனைவி வாளாம்பாள், தோழர் கணேசன், சர்ச்சில், காணியப்பன் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வைத்து வீரவணக்கம் செலுத்தி, வீரவணக்க முழக்கம் எழுப்பினர்.
பிறகு பெண்ணாடம் தமிழ்த் தேசியப் பேரியக்கக் கிளைச் செயலாளரும், புலவர் கலியபெருமாள் அவர்களின் தம்பியுமான தோழர் கு. மாசிலாமணி, தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர் தோழர் செந்தமிழ்குமரன், வழக்கறிஞர் இளங்கோவன், தமிழர் நீதிக் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கதிர்வேல், தோழர் சௌ.ரா. கிருட்ணமூர்த்தி, மனித நேயப் பேரவை திரு. பெ.ச. பஞ்சநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - திட்டக்குடி தொகுதி செயலாளர் திரு. க. வேந்தன், நாம் தமிழர் மகளிர் அணி தலைவி தோழர் அமுதா நம்பி, தோழர் மாறன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் சி.பிரகாசு, “எதிர்வினை” இதழ் ஆசிரியர் மு.பழனிவேல், “கலகம்” இயக்குநர் வ. கீரா ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில், புலவரின் “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” நூலை மறுபதிப்பாக விருத்தாசலம் வழக்கறிஞர் பரமசிவம் வெளியிட முதல்படியை தோழர் மாறன், பெறுவார் என அறிவித்தவுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5 வயது மாறன் பெயர் கொண்ட சிறுவன் ஓடி அந்த நூலை பெற்றுக்கொண்ட காட்சி அனைவரும் மெய்சிலிர்க்க வைத்தது. பிறகு இரண்டாம் படியை தோழர் மாறன், தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர் தோழர் க. சோழ நம்பியார், வழக்கறிஞர் புகழேந்தி, தோழர் எழிலன், தோழர் வாகை சுடர்வேந்தன், தோழர் தமிழ்சிவக்கண்ணு, தோழர் பிரபாகரன், தோழர் வெற்றித்தமிழன், தோழர் புரட்சிநம்பி, தோழர் தமிழ்குமரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில், தமிழ்நாடு முழுவதும் தமிழ்த் தேசிய போராளிகள், உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். முருகன்குடி தமிழ்த் தேசிய பேரியக்க தோழர்கள், சென்னை, காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து தமிழ்த் தேச மக்கள் கட்சி தோழர்களும் ஊர்திகளிலிருந்து குடும்பத்தோடு கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்த் தேசியப் பேரியக்க முருகன்குடி கிளைச்செயலாளர் தோழர் அரா. கனகசபை நன்றி தெரிவித்தார்.
புலவர் கலியபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.