ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கதிராமங்கலத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு!

கதிராமங்கலத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு!
தங்கள் மண்ணிலிருந்து எண்ணெய் எடுப்பதைத் தடுக்க முயன்று - காவல்துறை அடக்குமுறைக்கு ஆளான கதிராமங்கலம் கிராமத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நேற்று (14.06.2017) நேரில் சென்று, மக்களிடம் காவல்துறை அடக்குமுறை குறித்தும், ஓ.என்.ஜி.சி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஆலோசகர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், உழவர் சங்கத் தலைவர் திரு. பழனிராசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்டோரும், உணர்வாளர்களும் உடன் வந்தனர்.

கதிராமங்கலம் காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்து, குடந்தையில் வரும் செவ்வாய் (20.06.2017) அன்று, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு, கதிராமங்கலம் மக்களுக்கு வேண்டுகோளையும் அப்போது அவர்கள் முன்வைத்தனர்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
www.kannotam.com
www.Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.