ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஐயா நம்மாழ்வாருக்கு வீரவணக்கம்!

ஐயா நம்மாழ்வாருக்கு வீரவணக்கம்!

“வளமான தமிழர் மரபின் தெளிவான போராளி” - “தமிழர் மரபு வேளாண் அறிவியலாளர்” - ஐயா நம்மாழ்வாரின் நான்காம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு, கடலூர் மாவட்டம் - முருகன்குடியில் நடைபெற்றது.
 
பெண்ணாடம் வட்டம் - முருகன்குடியில், நேற்று (30.12.2017) காலை நடைபெற்ற இந்நிகழ்வில், ஐயா நம்மாழ்வார் அவர்களின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. செந்மிழ் இயற்கை வேளாண் நடுவம் ஐயா க. கண்ணதாசன் தலைமை தாங்கினார்.
செந்தமிழ் இயற்கை வேளாண் நடுவத்தின் பொறுப்பாளர் திரு. அரா. கனகசபை, நம்மாழ்வார் படத்திற்கு மாலை அணிவித்தார். ஆசிரியர் மு. பழனிவேல் கருத்துரை வழங்கினார். செந்தமிழ் இயற்கை வேளாண் நடுவத்தின் பொறுப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான தோழர் க. முருகன் நன்றி கூறினார்.
இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வரம் உழவர்களும், செந்தமிழ் இயற்கை வேளாண் நடுவத்தின் உறுப்பினர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், திருவள்ளுவர் தமிழர் மன்ற உறுப்பினர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
 


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.