ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இன்று (17.02.2018), காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று மாலை கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் கு. மாசிலாமணி தலைமையில் நடந்த போராட்டத்தில், மாந்த நேயப் பேரவை தோழர் பெ.ச. பஞ்சநாதன், அப்துல் கலாம் இலட்சிய பேரவை திரு. சிவத்திருநாதன், திரு. பாண்டியன், தமிழக உழவர் முன்னணி தோழர் மு. இராமகிருட்டிணன், தமிழக இளைஞர் முன்னணி தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி தோழர் தி.ஞானப்பிரகாசம், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அ.ரா.கனகசபை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.முருகன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிறைவாக துறையூர் கிளை தோழர் தே.இளநிலா நன்றி கூறினார்.
இந்திய அரசுக்கு எதிராகவும், தமிழர் உரிமையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.