ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் மீதான இனவெறியே காரணம்!


தமிழர் மீதான இனவெறியே காரணம்!

காவிரிச் சிக்கலில் தமிழினம் துரோகத்தை மட்டுமே சந்திப்பதற்குக் காரணம், தமிழர் மீதான இனவெறியே தவிர தேர்தல் கணக்கு அல்ல!

கர்நாடகத்தைவிடக் கூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட - மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டைப் பகைத்துக் கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் அதைவிடக் குறைவாகவுள்ள கர்நாடகத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என இந்திய அரசும், இந்தியக் கட்சிகளும், இந்திய ஊடகங்களும், இந்திய நீதிமன்றங்களும் கருதுவதற்கு அடிப்படைக் காரணம் - தமிழர் மீதான இனவெறியே ஆகும்!

இந்திய - கர்நாடக இனவெறியை மறைக்க வேண்டும் என்பதற்காக, தேர்தலே இதற்குக் காரணம் என்று மடைமாற்றும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலே இல்லாத போது தமிழர் மீது தாக்குதல்களும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து அடாவடித்தனத்திலும் இந்திய - கர்நாடக அரசுகள் ஈடுபட்டன; ஈடுபட்டு வருகின்றன.

இன்னொரு பக்கம், கார்ப்பரேட்டுகள்தான் காரணம் என்று மடைமாற்றம் செய்கின்றனர். சென்னையை சூழ்ந்துள்ள கார்ப்பரேட்டுகளைவிடவா பெங்களுருவில் கார்ப்பரேட்டுகள் இருக்கின்றனர்?

இக்காரணங்களையெல்லாம்விட முதன்மைக் காரணம் - தமிழர் மீதான இந்திய - கர்நாடக இனவெறிப் பகையே! அதுவே, காவிரிச் சிக்கலில் நாம் சந்திக்கும் துரோகங்களுக்கு அடிப்படைக் காரணம்!

இனியும் இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழர்கள் ஏமாறக் கூடாது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.