ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் உரிமைப் பறிப்புகளைக் கண்டித்து இன்று (மே 9) சென்னையில் கூட்டங்கள்!

தமிழர் உரிமைப் பறிப்புகளைக் கண்டித்து இன்று (மே 9) சென்னையில் கூட்டங்கள்!
காவிரி, நீட், ஐட்ரோகார்பன் திட்டங்கள் என தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து - நாசகரத் திட்டங்களைத் திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து, சென்னையில் இன்று (09.05.2018) நடைபெறும் கண்டனக் கூட்டங்களில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது. 

எம்.ஜி.ஆர். நகர்

சென்னை எம்.ஜி.ஆர். நகர் - நல்லதம்பி தெரு சந்திப்பில் இன்று மாலை - தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஒருங்கிணைக்கும் - காவிரி உரிமைப் பறிப்பு - தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக் கூட்டத்தில், த.தே.வி.இ. பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உரையாற்றுகின்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி பங்கேற்று உரையாற்றுகிறார். 

பாடி - இடைத்தெரு

பாடியில், சரவணா ஸ்டோர்ஸ் அருகிலுள்ள இடைத் தெருவில், தமிழர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைக்கும் கண்டனக் கூட்டத்தில், த.வி.க. தலைவர் தோழர் சௌ. சுந்தரமூர்த்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல். ஆறுமுகம் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்நிகழ்வுகளில், தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.