ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அண்ணல் அம்பேத்காரின் 123 ஆவது பிறந்தநாள் விழா

 
அண்ணல் அம்பேத்காரின் 123 ஆவது பிறந்தநாள் விழா தஞ்சை மாவட்டம், பூதலூர் நாள்ரோட்டில் நேற்று (14.04.2014) மாலை 7.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இவ் விழாவிற்கு அம்பேத்கார் சிலை அமைப்புக்குழு தலைவர் திரு பா.பிச்சைராஜ் தலைமையேற்றார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், விடுதலைத் தமிழ்புலிகள் மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோ, தி.மு.க.முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பூண்டி வெங்கடேசன், திராவிடக் கழகம் தோழர் சந்தாணம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, ஒன்றியச் செயலாளர் காமராசு, ரெ.கருணாநிதி, ஆ.தேவதாசு, க.காமராசு, தட்சணாமூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் பூதலூர் பகுதி பொது மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.





No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.