ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் மனு

தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது! இதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பங்கேற்றார்.
கார்டூன் பாலா கைது - வழக்கறிஞர் செம்மணி கால் உடைப்பு - பேராசிரியர் செயராமன் நூல் மீது வழக்கு - தோழர் முகிலன் கைது என தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வரும் சனநாயக மறுப்பு நிகழ்வுகளைக் குறிப்பிடு, தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. தி. வேல்முருகன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் நேரில் சென்று மனுவின் விவரங்களை டி.ஜி.பி.யிடம் விளக்கினர்.




தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.