ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! - தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!

மீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! - தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் ஒக்கிப் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை கணக்கில் கொண்டு - அதனை இந்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும், காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும், காணாமல் போன மீனவர்கள் குறித்த முழுமையானக் கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடெங்கும் ஆங்காங்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (12.12.2017) மாலை, தஞ்சையில் தொடர்வண்டி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தென்னவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை நிறைவுரையாற்றினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, பொதுக்குழு தோழர்கள் இரா.சு. முனியாண்டி, முருகையன் உள்ளிட்ட பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.
இன்று (13.12.2017) மாலை சென்னையிலும், மதுரையிலும், நாளை (14.12.2017) ஓசூரிலும், 16.12.2017 அன்று புதுச்சேரியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

இந்திய அரசே! மீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவி!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.