ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி உரிமை - கருத்தரங்கம்!

காவிரி உரிமை - கருத்தரங்கம்!
“காவரி உரிமை - சிக்கலும் புரிதலும்” என்ற தலைப்பில், நாளை (04.05.2018) சென்னையில் காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை சார்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

சென்னை எழும்பூர் இக்சா அரங்கில், நாளை (மே 5) மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு, காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. செ. பூரணச்சந்திரன் தலைமை தாங்குகிறார். திரு. த. பிரபு வரவேற்கிறார்.
காவிரி குறித்த ஓவியக் கண்காட்சியை, ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. கோட்ட மேலாளர் திரு. தே. தலக்கையா தொடங்கி வைத்துப் பேசுகிறார். ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரி திரு. இரா. மூர்த்தி தொடக்கவுரையாற்றுகிறார்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், ஊடகவியலாளர் திரு. கா. அய்யநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.