ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் நியூஜெர்சியில் கருத்தரங்கு - கலந்துரையாடல்!

ஐயா பெ. மணியரசன் அவர்களுடன்.. நியூஜெர்சியில் கருத்தரங்கு - கலந்துரையாடல்!
 “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பில், வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வட அமெரிக்கத் தமிழர்கள் (NAT) அமைப்பு நியூஜெர்சி மாகாணத்தின் ஜெர்சி மாநகரத்தில் நடத்திய கருத்தரங்கில் “தமிழ்த்தேசிய வரலாறு - தமிழ்த்தேசியத்தின் அவசியம் மற்றும் தமிழ்த்தேசியத்திற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டியவை?” என்பது குறித்து 31.10.2018 அன்றிரவு கலந்துரையாடல் நடைபெற்றது.
ஐயா பெ. மணியரசன் உரை நிகழ்த்திய பிறகு கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்வில், திரு. இராபர்ட் அருண் ஜேம்ஸ் (Robert Arun James ) அவர்கள் எழுதிய “அவதாரம்” என்ற கவிதைத் தொகுப்பை ஐயா மணியரசன் வெளியிட, நியூஜெர்சியில் குமாரசுவாமி தமிழ்ப் பள்ளி நடத்தி வரும் திரு. இராஜா இளங்கோவன் (Raja Elangovan ) பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தமிழக இளைஞர்கள் நடத்தி வரும் தமிழ்த்தேசிய அறிவுசார் அமைப்பான Tamilri.com வெளியிட்ட பல்வேறு ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பை ஐயா மணியரசன் பெற்றுக்கொண்டார்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.