ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மதுரையில் 4-ஆம் நாள் பரப்புரை இயக்கம் - கோவை போராட்டம் பற்றிய விளக்கப் பொதுக்கூட்டம்

 





மதுரையில்  4-ஆம் நாள்  பரப்புரை இயக்கம் -  விளக்கப் பொதுக்கூட்டம் 


தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! 


தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் 11.7.2022 அன்று நடைபெறும் முற்றுகைப் போராட்டம்- 4ஆம் நாள் பரப்புரை இயக்கம் & விளக்கப் பொதுக்கூட்டம் 26.6.2022  ஞாயிற்றுக்கிழமை சம்மட்டிபுரம் சாலையில் நடைபெற்றது.


மாலை 5.00  மணிக்கு சம்மட்டிபுரம் முதன்மைச் சாலை, பொன்மேனி முதன்மைச் சாலைப் பகுதியில் உள்ள கடைகளில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.


அதன்பிறகு மாலை 7.00 மணிக்கு சம்மட்டிபுரம் , எம்.ஜி.ஆர் சிலை அருகில் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் மேரி தலைமை வகித்தார்.


தோழர் ஆனந்தன் ( த.தே.பே.பொருளாளர்) தொடக்கவுரையாற்றிட தோழர்கள் தங்கப் பழனி, கரிகாலன், கதிர் நிலவன்  ( த.தே.பே.மதுரை மாநகர் செயலாளர்) ஆகியோர்  விளக்க உரையாற்றினர்.


இந்நிகழ்வில் தோழர்கள் மு.கருப்பையா, புருசோத்தமன், அழகர்சாமி, கலைவாணன், தியாகலிங்கம், விடியல் சிவா, நல்ல சிவம்,  இளமதி, ரேவதி, மகேசு, பாண்டி,  இலக்கியன், கவின், 

 ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.