ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கடனில் மூழ்கும் தமிழ்நாட்டு உழவர்கள்

கடனில் மூழ்கும் தமிழ்நாட்டு உழவர்கள்

கடனில் மூழ்கியுள்ள உழவர்களின் விழுக்காட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தை ஆந்திரா தட்டிச் சென்றுள்ளது.

இந்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கடந்த மே 3 2005 அன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த டிசம்பர் 2003 வரை இந்தியாவில் மொத்தமுள்ள 8 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் உழவர் குடும்பங்களில் 48.6 விழுக்காட்டினர், அதாவது 4 கோடியே 34 லட்சம் குடும்பத்தினர் கடனில் மூழ்கி உள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

ஆந்திராவில் உழவர் குடும்பங்களில் 82 விழுக்காட்டினர் கடனில் சிக்கியுள்ளனர். அடுத்து தமிழ்நாடு. தமிழகத்தில் 75 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் கடன் சேற்றில் சிக்கியுள்ளன.

தமிழ்நாட்டில் ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரிக் கடன் ரூ 23,963 ஆகும். இது அனைத்திந்திய சராசரியைவிட இரண்டு மடங்காகும். தமிழக உழவர்கள் வாங்கியுள்ள இந்தக் கடனில் 52 விழுக்காடு தனியார் கெந்து வட்டிக் காரர்களிடமும், 48 விழுக்காடு அரசு மற்றம் கூட்டுறவு வங்கியிலும் பெற்றது.

கடன் படுவதற்கான முதன்மைக் காரணம் விவசாயம் செய்வதற்குத்தான் என்பதையும் ஆய்வறிக்கை எடுத்துக் காட்டுகிறது. இரண்டாம் நிலைக் காரணங்களான திருமணம், கல்வி பிற குடும்பவிழாக்கள் வருகின்றன. நிலம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்குக் கடனும் அதிகமாக இருக்கிறது என்று மேலும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பெரும் முதலாளிகளும், பெரும் அரசியல் புள்ளிகளும் அரசு வங்கிகளில் பெற்றுள்ள 45,000 கோடி ரூபாய்க் கடனைச் சத்தமின்றி வாராக்கடன் என்று தள்ளபடி செய்யும் அரசாங்கம், கடனில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள உழவர்களைக் கண்டு கொள்ளவதில்லை.

நன்றி - தமிழர் கண்ணோட்டம் - சூலை 2005.

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.