ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய சன்குழுமம்

சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய சன்குழுமம்
-சாவித்தரி கண்ணன்-

 சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகப் புரிந்து விட்டது. சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் அசுரமான ஊடக பலம் கழகவளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்பது கனவானது. அது கட்சியை கபளிகரம் செய்யத்துடிக்கிறது என்பது நிருபணமாகிவிட்டது.
 கருத்துக்கணிப்பு என்பதாக தினகரன் திணித்து வந்த கருத்தாக்கங்கள், தமிழ்நாட்டில் தயாநிதியை தனிப்பெரும் தலைமை சக்தியாக அடையாளப்படுத்த எடுக்கப்பட்ட சூட்சம திட்டங்கள் என்பது சுளீரென உரைத்தது கருணாநிதிக்கு! காலங் கடந்து இதை கண்டுணர்ந்தார் கருணாநிதி எனினும், 'தன் காலம் முடிந்து போகும் முன்பே சுதாரித்துக் கொண்டார் தலைவர்" என்பது கழக உடன்பிறப்புகளிடம் மட்டுமல்ல குடும்ப உறவுகளிடமும் நிம்மதியை உருவாக்கியுள்ளது.
 தமிழ் நாட்டிலிருந்து மத்திய அமைச்சர் ஆனவர்களில் சிறப்பாக செயல்படுபவர் யார்? என்ற கருத்துக்கணிப்பில் தயாநிதிக்கு 66 மதிப்பெண்ணும், ப.சிதம்பரத்திற்கு 24 மதிப்பெண்ணும், அன்புமணிக்கு 2 மதிப்பெண்ணும் தந்து, கூட்டணிக்குள் குழப்பம் உண்டானாலும் பரவாயில்லை தம்பி தயாநிதியின் தகுதியை முன் நிறுத்த வேண்டும் என்று கலகத்திற்கு தயாரானார் கலாநிதி. தனக்குத்தானே கிரீடம் சூட்டிக்கொள்வது என்பது ரத்தவழியாக தாத்தா கருணாநிதியிடம் கண்டுணர்ந்த பால பாடம் அல்லவா? ஆக, இன்னும் கூட புரிந்து கொள்ளாதவர்களுக்கு இப்போதாவது உணர்த்த வேண்டாமா..? இன்னும் எத்தனை காலம் தான் சவலைப் பிள்ளை ஸ்டாலினை து}க்கி, கக்கத்தில் இருத்தி, 'இவன் தான் அடுத்த வாரிசு" என அறிவிக்க முடியாமல் அறிவுறுத்திக் கொண்டிருப்பார்?
 ஸ்டாலினோ பாவம் முப்பது வருட பயிற்சிக்குப்பின்னும்; கருணாநிதியின் முழங்காலளவுக்குத்தான் வளர்ந்திருக்கிறார்... ஆனால் மூன்றே ஆண்டுகளில் தயாநிதி கருணாநிதியின் கழுத்திற்கு மேல் வளர்ந்து விட்டார். இந்தியாவே போற்றும் இளம் அமைச்சர் தமிழ்நாட்டிற்கு தலைமை தாங்கக் கூடாதா...? என்று 'கார்பரேட் தாதா" கலாநிதி போட்ட அவசர கணக்கில் உருவான கருத்துக்கணிப்பு எல்லாவற்றையும் அலங்கோலமாக்கிவிட்டது.
 கருணாநிதியின் வாரிசாக மு.க.ஸ்டாலினுக்கு 70 சதவிகிதமும் மு.க.அழகிரி, கனிமொழிக்கு 2 சதவிகிதமும், மற்றவர்கள் என்பதாக 20 சதவிகிதமும் வழங்கப்பட்டிருந்த கருத்துக்கணிப்பில் அந்த மற்றவர்கள் என்ற பெயரில் மறைந்து கொண்டிருப்பது தயாநிதிமாறன் என்பதை தயக்கமின்றி புரிந்து கொண்டார் கருணாநிதி.
 இந்தப்பின்னணியில் தான் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு பத்திரிகைகளை எரித்து, பஸ்களை உடைத்து அராஜகம் புரியும் செய்தி காலை 9.30 மணிக்கே கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபின்பும், காவல்துறைக்கு தலைமைதாங்கும் அமைச்சரான முதல்வர், காவல்துறையினருக்கு நிலைமைகளை கட்டுப்படுத்தும் கட்டளைகள் பிறப்பிக்கவில்லை, பிறகு 11 மணியளவில் தான் தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் மூச்சு திணறி இறந்தனர்.
 அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு நர்த்தனமாடியதை அமைதியாக வேடிக்கை பார்த்தது காவல்துறை, அவர்களின் கைகள் கட்டப்பட்டிருந்ததற்கான காரணங்கள் என்ன? அவ்வளவு அத்துமீறல்களுக்குப் பிறகும் அவமானப்பட ஏதுமின்றி அழகிரியை சிறப்பு பாதுகாப்புடன் சென்னைக்கு வரவழைத்ததும், முதல்நாள் சட்டமன்றத்திற்குள்ளேயே, அழகிரி சகஜமாக வந்து சென்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பது சன், தினகரன் குழுமத்திற்கும், அழகிரிக்குமான பிரச்சiனையல்ல. இது கட்சித்தலைவரான கருணாநிதிக்கும், ஊடக செல்வாக்கில் ஓங்கிநிற்கும் சன், தினகரன் குடும்பத்திற்குமான பிரச்சனை என்பது பளிச்சென்று வெளிப்பட்டது.
 'இது ஏதோ ஒரே நாளில் உருவான கசப்புணர்ச்சியல்ல. தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் ஆக்கியதிலிருந்து ஆரம்பமான தலைவலிதான்" என்கிறார்கள் தி.மு.கவின் முன்னணிப் பிரமுகர்கள்.
 மாறன் குடும்பத்தின் பின்னணி, சன், தினகரன் குடும்பத்திற்கு அச்சாணியாக விளங்கிய பலம் போன்றவைகளை பின்னோக்கிப் பார்த்தால் கருணாநிதியின் கசப்புணர்ச்சிலிருக்கும் 'காரணங்களை" புரிந்து கொள்ளலாம்.

மணம் வீசாத பூமாலை
 1989-ஆம் ஆண்டு- 13 வருட வனவாசத்திற்கு பிறகு மீண்டும் தி.மு.க அரியணை ஏறிய அந்தகாலக்கட்டத்தில் தான் 'பூமாலை" என்ற வீடியோ இதழை விற்பனைக்கு கொண்டு வந்தனர் மாறன் சகோதரர்கள். பூமாலை இதழுக்கென்று புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்தாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்களையே சம்பளமில்லாத செய்தியாளர்களாக, பேட்டியாளர்களாக பயன்படுத்திக்கொண்டனர் மாறன் சகோதரர்கள்.
 வீடியோ கடைகள் மற்றும் நு}லகங்களின் வாயிலாக விற்பனைக்கு கொண்டு செல்லபட்ட இந்த வீடியோ இதழை விரும்பி பார்க்க ஆளில்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் தி.மு.க வசமிருந்த காரணத்தால் விற்க மறுத்த வீடியோ நு}லகத்தினர், 'வில்லங்கத்தில் மாட்டநேரிடும், ரெய்டு நடத்தி ஆபாச கேசட்டுகள் இருந்ததாக வழக்குப்போட்டு லைசென்ஸ் ரத்தாகக்கூடும்" என எச்சரிக்கப்பட்டனர். இதனால் 10 முதல் 25 வீடியோ கேசட்டுகளை பய உணர்வில் வாங்கினர் வீடியோ கேசட் கடைகாரர்கள்.
 1991ல் கருணாநிதி அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மாறன் சகோதர்கள் மௌனமானார்கள். மணம் வீசாத, யாரும் விரும்பிச்சூடாத இந்த பூமாலை செத்துப்போன பிணத்தின் மீது சாத்தப்பட்ட மாலையாக, மண்ணோடு மண்ணாக சவக்குழிக்குப் போனது. காமாலை போல் கண்களை உறுத்திய கலைநேர்த்தியற்ற- பூமாலை இதழ் உதிர்ந்தது கண்டு உள்ளப்படியே உள்ளம் மகிழ்ந்தனர் வீடியோ கடைகாரர்கள்.
 அதன் பிறகு ஈராண்டுக்காலம் இருக்கும் இடம் தெரியாமல், செய்யக்கூடியத்தொழில் இன்னதென்று தெளிவில்லாமல் மாறன் சகோதரர்கள் சும்மாயிருந்தனர்.
 
சன் தொலைக்காட்சியின் தொடக்கம்
 அக்டோபர்  1992ல் ஜீ தொலைக்காட்சி(ணுநந வுஎ) இந்திய தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் முன்னோடியாக களத்திற்கு வந்தது. அது முதல் மாறன் சகோதரர்கள் தாங்களும் அதுபோல் தனியார் தொலைக்காட்சி ஆரம்பிக்க வேண்டுமென தந்தையை நச்சரிக்கத் தொடங்கினர்.
 1967 தொடங்கி தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும், அடுத்து வி.பி.சிங் ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாகவுமிருந்த முரசொலிமாறன், தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித்தந்து கைமாறாக பெற்ற பலன்கள், சலுகைகள் தாராளம், ஏராளம். மேக்னம் டாட்டியா என்ற தொழிலதிபர் பல ரிசார்ட்டுகளை நடத்திவந்தார். அவருக்கு உலகின் பெரும்செல்வந்தரான புருனே சுல்தான் ரஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பான்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார். அதை எப்படி பயன்படுத்துவதென யோசித்து கொண்டிருந்த டாட்டியாவிடம், முரசொலிமாறன் தனக்குத் தரும்படி கேட்க, அவரும் தந்துவிட்டார். இப்படியாக கிடைத்த இலவச சேட்டிலைட் ஒளிபரப்பு உதவியுடன் தான் மாறன் சகோதரர்கள் ஏப்ரல் 14-1993ல் சன் தொலைக்காட்சியைத் தொடங்கினர்.
 அண்ணாசாலையில் இருந்த, பழைய முரசொலி அலுவலகக் கட்டிடத்தை மந்தை வெளியிலிருந்த சிட்டியூனியன் வங்கியில் அடமானம் வைத்து சன் தொலைக்காட்சி நடத்த பணம் ஏற்பாடு செய்தார் கருணாநிதி. சன் தொலைக்காட்சியை முரசொலிமாறனை சேர்மனாகவும், மல்லிகா மாறன் மற்றும் தயாளு அம்மாளை இயக்குநர்களாகவும் கொண்டு ஆரம்பித்தனர். மேலும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன், மு.க.ஸ்டாலின் போன்றோர் பங்குதாரர்களாக்கப்பட்டனர்.
 அப்போது கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்திலேயே சன் தொலைக்காட்சி செயல்பட்டது. குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் பத்திரிக்கையாளர்கள் சிலரையே கூடுதலாக 500 ரூபாய் சம்பளம் தந்து சன் தொலைக்காட்சிக்குப் பணிபுரியும் படி கட்டாயப்படுத்தினர்.
 
பிரகாசிக்கமுடியாத 'சன்"
 நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், சன் தொலைக்காட்சியை நிமிர்ந்தும் பார்க்காத விளம்பரதாரர்கள் பொருட்படுத்தாத அந்த நேரம் து}ர்தஷன் மட்டுமே து}ள்கிளப்பிக் கொண்டிருந்தது.
 மாறன் சகோதரர்களுக்கு படைப்பாற்றல் கிடையாது. நிர்வாகத் திறமையும் இல்லை. பார்வையாளர்களை கவர முடியவில்லை. இலவச ஒளிபரப்புவசதி உள்ளிட்ட இன்ன பிறவசதிகள் அமைந்தும் முதல் இரண்டு ஆண்டுகள் மூச்சுத் திணறி நஷ்டப்பட்டது சன் தொலைக்காட்சி.

அதிகாரத்தால் அமைந்த வளர்ச்சி
 மீண்டும் 1996ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். உதயசூரியனின் அதிகாரச்சுடர் சன் தொலைக்காட்சியின் சாம்ராச்சியத்திற்கு வழிகோலியது. அப்போதைய து}ர்தசன் இயக்குநராய் இருந்த நடராசன் கருணாநிதிக்கு உதவியாக கைங்கரியங்களைச் செய்து அரசுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவலத்திற்கு ஆளாக்கினார். மத்திய அரசிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு மாறன் மகன்களுக்கு மதியூகியாகச் செயல்பட்டார். அப்போது ஒவ்வொரு பண்டிகை நாளிலும் து}ர்தஷன் ஒளிபரப்பில் சிக்கல் வரும். பார்வையாளர்கள் வீட்டிலிந்தபடியே தொலைபேசி வழியாக பங்கேற்கும் பல பிரபல நிகழ்ச்சிகளின் போது தொலைபேசி வயர்கள் துண்டிக்கப்படும். இப்படியாக சன் தொலைக்காட்சிப் பக்கம் மக்களை திருப்ப பல சதித் திட்டங்கள் அரங்கேறின. து}ர்தஷன் விளம்பரதாரர்களுக்கு து}ண்டில் விரிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரமும் பல அனுகூலங்களைத் தந்தது. மத்தியில் வாஜ்பாய் அமைச்சரவையில் மாறனுக்கு தொழில் வர்த்தகத் துறை கிடைத்ததும் சன் தொலைக்காட்சிக்கு யோகம் அடித்தது. அப்பாவின் அதிகார பலத்தால் மிகப்பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் சரசரவென வந்தன சன் தொலைக்காட்சிக்கு! மளமளவென்று ஒவ்வொரு மொழிகளிலும் சேனல்களைத் துவக்கினார்.
 2000ஆவது ஆண்டில் தி.மு.க ஆட்சியிலிருக்கும் போது 'சுமங்கலி கேபிள் விஷன்" என்ற கேபிள் நெட்வொர்க் தொழிலை தயாநிதிமாறன் தொடங்கினார். அது நாள் வரை சென்னையில் கேபிள் நெட்வொக்கில் 60 சதவிகிதத்தை ஹாத்வே என்ற வடஇந்திய நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது. 40 சதவிகிதம் ஆங்காங்கே சிறிய கேபிள் உரிமையாளர்கள் வசமிருந்தது. தயாநிதிமாறன் தடாலடியாக சென்னை கேபிள் ஆப்ரேட்டர்களை அழைத்து சொந்த முயற்சிகளை ஒளிபரப்புகளை அப்படியே கைவிட்டு சுமங்கலி கேபிள் விஷனில் கமிசன் ஏஜென்ட்டாகும்படி நிர்பந்தித்தார். மறுத்த கேபிள் ஆப்ரேட்டர்கள் மிரட்டப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஸ்டாலின் வசமிருந்த காரணத்தால் கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்தத் தொல்லைகள் அவர்களை மண்டியிட செய்தன மாறன் சகோதரர்களிடம்!
 'ஹாத்வே"யின் கேபிள் வயர்கள் ஆங்காங்கே அறுத்தெறியப்பட்டன. இந்நிறுவனம் பைபர் கேபிள் நெட்வொர்க் சிஸ்டத்திற்கு பலமான ஏற்பாடுகள் செய்துவிட்ட நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்தது. மறுபுறம் தயாநிதிமாறன் நெருக்கடிகளால் ஹாத்வேயின் கீழ் இருந்த கேபிள் ஆப்ரேட்டர்களின் 90 சதவிகிதத்தினர் எஸ்.சி.வி வசம் மாறினர்.

இந்தியாவில் வேறெங்கும் இல்லை
 இந்தியாவில் மும்பை, டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா உள்ளிட்ட எந்த நகரத்திலுமே இது போல் ஒட்டுமொத்த கேபிள் ஆப்ரேட்டர்களும் ஒரே குடையின் கீழ் சென்றதில்லை. குறைந்தது மூன்று நான்கு நிறுவனங்களாவது ஒவ்வொரு நகரத்திலும் செயல்பட்டன. ஆனால், தனது அதிகாரபலத்தால் போட்டியாளர்களை அழித்தொழிக்கும் வேலையை அசராமல் செய்தது சன் குழுமம்.
 தமிழகத்தின் பிரதான நகரங்கள் அனைத்திலும் இன்று எஸ்.சி.வியை எதிர்க்கவே ஆளில்லை. இதனால் தமிழன் தொலைக்காட்சி, விண் தொலைக்காட்சி, தினத்தந்தியின் ஏ.எம்.என் நியூஸ் சேனல் உள்ளிட்ட தமிழ்ச் சேனல்கள் தரக்குறைவான அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டு ஓரங்கட்டப்பட்டன. கேரளாவின் பிரபலமான ஏசியாநெட் தொலைக்காட்சி, தமிழில் பாரதி தொலைக்காட்சியை தொடங்கி பற்பல தொல்லைகளுக்கு ஆளாகி சன் குழுமத்தால் சவக்குழிக்குள் தள்ளப்பட்டது.  
 இந்தியா டுடே குழமத்திலிருந்து வெளிவரும் ஆஜ்தக் சேனலை ஒளிபரப்ப மறுத்து வந்தார் கலாநிதிமாறன். கருணாநிதி கைதான சம்பவத்தை மீண்டும் மீண்டும் வடஇந்தியாவில் ஒளிபரப்பி மாறன் சகோதரர்களின் மனதில்  இடம்பிடித்தது ஆஜ்தக். இதனால் உடனே ஆஜ்தக் சேனல் தமிழ்நாட்டில் ஒளிபரப்ப ஒப்பந்தம் ஆனது. இதற்குப் பிரதியுபகாரமாக இந்திய முதலமைச்சர்களின் நிர்வாகத் திறமை வரிசையில் ஜெயலலிதா கடைசியில் இருப்பதாக ஒவ்வொரு ஆண்டும் கருத்துக்கணிப்பு வெளிட்டது இந்தியா டுடே.
 இப்படியாக கேபிள் வலைப்பின்னல் மூலமாக தாங்கள் விரும்புவதை மட்டுமே தங்கள் நலன்களுக்கு அனுகூலமானவை மட்டுமே மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் சர்வாதிகாரம் மாறன் சகோதரர்களின் வசம் போனது. வியாபாரத்தில் கிடைத்த இவ்வெற்றி அரசியல் ஆசைக்கு அடித்தளமிட்டது. இந்த நிலையில் தான் தாத்தா கருணாநிதியிடம் முரசொலிமாறனுக்கு பிறகான அரசியல் முக்கியத்துவம் கருதி கலாநிதியும் தயாநிதியும் காய்நகர்த்தினார்கள். அரசியல் அதிகாரம் என்பது வியாபார எதிரிகளை வீழ்த்துவதற்கு எவ்வளவு உறுதுணையானது என்பதை அவர்கள் அனுபவப்பூர்வமாக அறிந்திருந்தனர். அப்பாவின் அதிகாரபலத்தால் தானே முதலில் இலவச டிரான்ஸ்பான்டரும் பிறகு மிக சுலபமாக வெளிநாடுகளிலிருந்து கருவிகளை இறக்குமதி செய்யும் வுசுயுஐ லைசென்சும்; இந்தியாவிலிருந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான று.P.ஊ கிளியரன்சும்; கிடைத்தன. ஆனால் ஜெ.ஜெ தொலைக்காட்சி இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு முடியாமல் போய் வழக்கம் போல் அத்துமீறி செயல்பட முயன்ற போது அந்நியச்செலாவணி மோசடியில் அகப்பட்டுக் அடங்கிப்போனார்கள்.
 1967ல் அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்திற்கு தேர்வான பொழுது முதலமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டி பாராளுமன்ற பொறுப்பிலிருந்து விலகினார். அந்த இடத்தை அண்ணாவிடம் மன்றாடி மாறனுக்கு பெற்றுத் தந்தவரல்லவா கலைஞர்? அந்த கலைஞர் இன்று கழகத்தலைவர். மாறனுக்கு தந்த முக்கியத்துவத்தை மகனும் கேட்டுப் பெற்றால் என்ன? என்றுதாய்வழிச் சொந்தங்கள் தந்த தைரியத்தில் தாயநிதியும் தயாரானார்.
 ஏ.என்.கல்யாணசுந்தர அய்யருக்கும், பிரபல நாட்டிய மணியும், இரண்டு திரைப்படங்களில் நடித்தவருமான கும்பகோணம் பானுமதிக்கும் பிறந்தவர் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா ஹிந்து ஆங்கில நாளிதழின் அக்கிரகாரத்து அம்மணி. ஆண்டாண்டு காலமாக கட்சிக்கு ஊனும் உயிரும் தந்து உழைத்த உடன்பிறப்புகள் ஆயிரமாயிரம் இருக்க, அவர்களிலும் அறிவிற்ச்சிறந்த அரசியல் அறிந்தவர்கள் பலர் இருக்க, ர்.கு.ழு எனப்படும் இரவுநேர விடுதி நடத்தி மதுவும், மங்கையுமாக கூத்தடித்துக் கொண்டிருந்த தயாநிதிமாறனை அவரது தாய்வழிச் சொந்தங்களும்? மனைவி வழி சொந்தங்களும் அரசியலுக்கு ஆயத்தப்படுத்தின.
 
தயாநிதிக்கு தரப்பிட்ட முக்கியத்துவங்கள்
 அரசியலில் அடிஎடுத்து வைத்தவுடனேயே தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தாரை வார்க்கப்ட்டது. முதன்முதலாக பாராளுமன்றத்தில் கால்பதிக்கும் போதே 'காபினெட்" அந்தஸ்த்து அமைச்சரானார் தயாநிதி மாறன். முப்பது வருடங்களாக அரசியலில் மும்முரமாய் பணியாற்றி, பட்டிதொட்டி எங்கும் பயணப்பட்டு கட்சி பணியாற்றி 'மிசா" கொடுமைகளையெல்லாம் அனுபவித்து மீண்ட ஸ்டாலினை அரசியலில் முன்நிறுத்தும் போதெல்லாம் கருணாநிதி வாரிசு அரசியல் செய்கிறார் என்று வரிந்து கட்டிய ஊடகங்கள் தயாநிதியை முன்நிறுத்தியபோது தாறுமாறாக விமர்சனக்கணைகளை வீசவில்லை.
 தி ஹிந்துவும், தினமலரும், விகடன் குழும இதழ்களும் தயாநிதியை தாங்கிப்பிடித்து, தனிப்பெரும் திறமையாளாராக அடையாளப்படுத்தினர். மு.க.ஸ்டாலினைக்காட்டிலும் தயாநிதிமாறன் தமிழகத்திற்குத் தலைமை தாங்க பொருத்தமானவர் என்று மிக வெளிப்படையாக தினமலர் வாசகர் கடிதப்பகுதியில் விலாவரியான கடிதங்கள் வெளியாகின.

போட்டியாளர்களைப் பொசுக்குவேன்
 தகவல் தொழில்நுட்பத்துறை தான் வேண்டும் என தாத்தாவிடம் வாதாடி வேண்டி பதவி பெற்ற தயாநிதிமாறன் செய்த அதிகார அத்துமீறல்கள் அளவற்றவை. தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக சேனல் ஆரம்பிக் வேண்டி வந்த விண்ணப்பங்களை அலட்சியம் செய்தார்.
 வுசுயுஐ லைசென்சும் றுPஊ கிளியரன்சும் இல்லையென்றால் தொலைக்காட்சி ஆரம்பிக்க முடியாது. இவை இரண்டையும் அனுமதிக்கும் அதிகாரம் தம்பி தயாநிதியின் கையிலிருந்தது. அண்ணன் கலாநிதியின் கட்டளைப்படி காட்சி ஊடகங்கள் எதையும் கால் பதிக்க விடாமல் தடுத்தாண்டார் தயாநிதி.
 'மலர் தொலைக்காட்சி" என்பதாக தினமலர் குழுமத்திலிருந்து திட்டமிட்ட சேனல் முயற்சிகளுக்கு மூன்றாண்டுகள் முட்டுக்கட்டை. இதே நிலை ஜெ.தொலைக்காட்சியிலிருந்து திட்டமிட்ட 24மணிநேர நியூஸ் சேனலுக்கும் ஏற்பட்டது. (ஜெயா தொலைக்காட்சி நீதிமன்றம் சென்று போராடியும், அரசியல் பலத்திலும் உரிமம் பெற்றுவிட்டது) 'தமிழ்திரை" தடம் தெரியாமல் மறைந்தது. லைசென்சை புதுப்பிக்க காலதாமதமானதை காரணங்காட்டி 'ராஜ் ப்ளஸ்" சேனல் ஒளிபரப்பு ரத்துச்செய்யப்பட்டது. இப்படியாக சுமார் 60 சேனல்களுக்கு அணைப்போட்டு தடுத்து அண்ணன் கலாநிதிக்கு அனுசரணையாக அதிகாரத்தை கையாண்டார் தயாநிதி.
 ராஜ் தொலைக்காட்சியிலும், விஜய் தொலைக்காட்சியிலும் செய்திகள் ஒளிபரப்ப தடைசெய்யப்பட்டது. விஜய் தொலைக்காட்சியில் 'மக்கள் யார் பக்கம்" என்ற பிரபல அரசியல் நிகழ்ச்சியை 'உடனே நிறுத்தாவிட்டால் விளைவுகள் விபரீதமாகும்" என தயாநிதியே தொலைபேசியில் மிரட்டி நிறுத்தினார். 'சன் தொலைக்காட்சி பார்வையாளர்களை திசை திருப்பும் எந்த ஒரு ஊடக செயல்பாட்டையும் சகித்து கொள்ள முடியாது" என்பதே தயாநிதி அமைச்சகத்தின் எழுதப்படாத தாரக மந்திரமாயிருந்தது.

கதிகலங்கிய கருணாநிதி
 இப்படியாக எவ்வளவு வில்லங்கங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தியபோதும் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை. உலகப்பெரும் பணக்காரரான பில்கேட்ஸை தமிழகம் அழைத்து வந்து கலாநிதி வீட்டில் விருந்துண்ண வைத்தார் தயாநிதி. ரிலையன்ஸ் குழுமத்துடன் நெருங்கிச் சென்று வியாபார பரிவர்த்தனைகளை விருப்பம் போல் ஏற்படுத்திக் கொண்டார். பரம்பரை பணக்காரரான ரத்தன் டாட்டாவிடம் வியாபார உறவு வேண்டி நிர்பந்தித்தபோது, 'இது வில்லங்க கூட்டம்" என அவர் விலகிச் சென்றார்.
 'விட்டேனா பார் உன்னை" என தயாநிதி தடாலடியாக ரத்தன் டாட்டாவை மிரட்டிய போது கூட, கருணாநிதி, பேரனை அழைத்து கண்டித்ததாக செய்தி இல்லை. கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுகளவும் மதிக்காமல், தானடித்த மூப்பாக தயாநிதி டெல்லியில் வலம் வந்தபோதும் கருணாநிதி இதையெல்லாம் கவனித்ததாக காட்டிக்கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக திராவிட இயக்கச் சித்தாந்தங்களுக்கு எதிரான, பழைமைவாத, மூடநம்பிக்கையை பரப்பும் பத்தாம் பசலலித்தனமான கருத்துக்களை மீட்ருவாக்கம் செய்வதில் சன் தொலைக்காட்சி சளைக்காமல் சாதனை புரிந்த போதும், கருணாநிதி வேதனை கொண்டவராகக் தன்னை வெளிக்காட்டவில்லை. கூட்டணி கட்சிகளுக்கிடையே குளறுபடி உருவாக்கும் செய்திகளை பரப்பிய போதும் கருணாநிதி கோபப்பட்டு எழுந்தாரில்லை. ஆனால், 'தனக்குப் பிறகு கட்சித் தலைமையைக் கைப்பற்ற கணக்குப் போட்டுவிட்டனர்" என அறிய வந்த போது தான் கலங்கிப் போனார். தன் சொந்தமகன்களுக்குச் சொத்துரிமையாக தி.மு.கவும் அது நடத்தும் ஆட்சியும் போகவேண்டும் என்ற தமது ஆயுள் இலட்சியத்திற்கு ஆபத்தா என்று ஆவேசப்பட்டார். கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்யத்துடிப்பவர்களை வெட்டிவிடுவது தான் விவேகம் என வேகமாக முடிவெடுத்தார்.

எப்போது முதல் இந்தப் பிளவு?
 1993-ல் முரசொலியின் பழைய கட்டிடத்தை வங்கி அடமானம் வைத்து சுமார் மூன்று கோடி தந்து சன் குழுமத்திற்கு வித்திட்டவர் கருணாநிதி. இன்று சன் குழுமத்திற்கு 14 தொலைக்காட்சி சேனல்கள், 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 வானொலி நிலையங்கள் சொந்தம். சன் தொலைக்காட்சி பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக 2005 முதல் அறிவித்து கொண்டு களத்திற்கு வந்து விட்டதால் இன்று அதன் மொத்த ஷேர்கள், அவற்றின் மதிப்பு போன்றவற்றை கணக்கிட்டு இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக கலாநிதிமாறன் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதன்படி, சன் தொலைக்காட்சியில் கலாநிதிமாறனின் 90 சதவிகித பங்குகளின் மதிப்பு இன்றைய பங்குசந்தை நிலவரப்படி, கலாநிதியின் சொத்து மதிப்பு சுமார் 9765 கோடி..! அதாவது இது அதிகாரப்பூர்வமான, சட்டப்படியான சன் தொலைக்காட்சி மூலமான சொத்துமதிப்பு மட்டும் தான்!
 இதை கணக்கிட்டுத் தான் இந்தியாவின் இருபதாவது பணக்காரராக கலாநிதிமாறன் அறிவிக்கப்பட்டார். ஆனால் சன் குழுமம் தவிர்த்த 25 நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். ஜெமினி தொலைக்காட்சி, உதயா தொலைக்காட்சி, தினகரன் குழுமம், குங்குமம் உள்ளிட்ட பருவ இதழ்கள், எப்.எம் வானொலி நிலையங்கள் கால் கேபிள்ஸ், கால் கம்யுனிகேஸன்ஸ், டி.எம்.எஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், டி.கே எண்டர்பிரைசஸ் போன்ற 25 நிறுவனங்களிலும் அவர் தான் மிகப்பிரதான பங்குதாரர்களாகவும், மனைவி, அம்மா மல்லிகா, தம்பி தயாநிதி.. உள்ளிட்ட குடும்ப உறவுகளை சிறிய பங்கு தாரர்களாகவும் கொண்டு நடத்திவருகிறார்.
 இவை அனைத்தையும் கணக்கிலெடுத்தால் கலாநிதிமாறன் குறைந்த பட்சம் 40,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகிறார்.
 கலாநிதியின் எந்த ஒரு நிறுவனத்திலும் கருணாநிதியின் ரத்த உறவுகள் பங்குதாரர்களாக அனுமதிக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது. தனது சித்தப்பா முரசொலி செல்வத்திற்கும் அவருடைய மனைவியாகவுள்ளதால் கலைஞரின் மகள் செல்விக்கும் ஓரிரு நிறுவனங்களில் மிகச்சில பங்குகளை அனுமதித்துள்ளார். (ஆகவே தான் முரசொலி செல்வம் மாறன் சகோதரர்களைத் தீவிரமாக  ஆதரிக்கிறார்)
 ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பிரதான பங்குதாரராக இருந்தார். மற்ற சிலரும் இருந்தனர். ஆனால் காலப்போக்கில் இவர்கள் எப்படி கழற்றி விடப்பட்டனர் என்ற சூட்சமம் தெரியவில்லை. ஆனால் நவம்பர் 2005-ல் அதிகார பூர்வமாக தயாளு அம்மாள் தனது 20 சதவிகித பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டு விலகினார் என செய்தி வெளியானது. அதில் ஒரு பகுதியாக பத்து கோடியை தனக்கு தந்தார் என கூறிய கருணாநிதி, அதில் ஐந்து கோடியை தன் பெயரிலான அறக்கட்டளை அமைத்து தமிழறிஞர்களுக்கு உதவப்போவதாக அறிவித்தார். ஆனால் 20 சதவிகித பங்கின் மூலமாக மொத்தம் 800 கோடி ரூபாய் தயாளு அம்மாளுக்கு தரப்பட்டிருக்க வேண்டும். தயாளு அம்மாள் தொடர்ந்திருந்தால் இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி(ஒரு பங்கின் மதிப்பு ரூ.1500) அவர் பங்கிற்கு கிடைக்க வேண்டிய தொகை சுமார் 1500 கோடியாகும். வேகமாக விஸ்வரூபமெடுத்து வளரும் நிறுவனத்திலிருந்த தனது பங்குகள் முழவதையும் தயாளு அம்மாள் விருப்பப்பட்டு விலக்கிக் கொண்டாரா? அல்லது வெறுப்புற்று வெளியேற நிர்பந்திக்கப்பட்டாரா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. ஆனால் சன் குழுமம் ஆக்டோபஸ் விலங்காய் நீண்டு கொண்டு போகும் தருவாயில் ஆணிவேராய் தங்களுக்கு ஆரம்பத்தில் உதவிய கருணாநிதியின் குடும்ப உறவுகளுக்கு எந்தப் பலனுமில்லாமல் பார்த்துக் கொண்டனர் மாறன் சகோதரர்கள்!

தொடர்ந்து செய்த துரோகங்கள்
 ஆனால் மாறன் சகோதரர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகளை எந்த நிலையிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் விவேகமாகவும், பல நேரங்களில் பெருந்தன்மையாகவுமிருந்தார் கருணாநிதி.
 தனது கலையுலக அனுபவங்களை தொடராக எழுத விரும்பினார் கருணாநிதி. அதை குங்குமம் இதழுக்கு சில ஆரம்ப அத்தியாயங்களை எழுதித்தந்தார். ஆனால் அதை பல மாதங்களாக பிரசுரிக்காமல் அலட்சியப் படுத்தினார் கலாநிதி. கலாநிதியின் கட்டளையால் தான் தனது கட்டுரைகள் பிரசுரமாகவில்லை என்பதை அறிந்த கருணாநிதி அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க, அது விகடனில் வாராவாரம் வெளியாகி வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டது.
 பல நேரங்களில் கருணாநிதியின் முக்கிய அறிக்கைகள் போதுமான முக்கியத்துவமின்றி சுருக்கி சொல்லப்படுவது, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சிலவற்றை ஒளிபரப்பாதது, பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின் போன்றவர்களின் நிகழ்ச்சிகளையும், அறிக்கைகளையும் கூடுமானவரை தவிர்த்தது, நாடறிந்த கவிஞரான கனிமொழி 'கருத்து" என்ற அமைப்பை தோற்றுவித்த போதும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய போதும் இருட்டடிப்பு செய்தது... போன்ற பல சம்பவங்கள் கருணாநிதியை பலமாக பாதித்த போதும் வெளிப்படையான மோதலை அவர் விரும்பவில்லை.
 கருணாநிதிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதால் மாலன், அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். கருணாநிதி சிபாரிசு செய்யும் யாரையும் சன் செய்தி பிரிவிலோ அல்லது வேறு பிரிவிலோ சேர்ப்பதில்லை என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாக கடைபிடித்தார் கலாநிதி.

யாருக்கு யாரால் நன்மை:
 1996 தொடங்கி ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றம் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் தி.மு.கவின் வெற்றிக்கு சன் தொலைக்காட்சியின் பலம் பிரதானமாகக் கருதப்பட்டது. பெருவாரியான பார்வையாளர்களை தன் வசம் வென்றடுத்திருந்த சன் குழுமத்தின் செய்திகள், கருத்துக்கணிப்புகள், விவாதங்கள் போன்றவை தி.மு.கவின் வெற்றிக்கு கணிசமான பங்காற்றியது.
 கருணாநிதி 100 கூட்டங்களில் பேசினாலும் ஏற்படுத்தமுடியாத தாக்கத்தை சன் தொலைக்காட்சியின் பத்து நிமிட ஒளிபரப்பு ஏற்படுத்துகிறது...அவரது காலடி தடம் படமுடியாத குக்கிராமங்களுக்குக்கெல்லாம் தங்கள் சேனல் தான் அவரது கருத்துக்களை கொண்டு சேர்க்கிறது...என்றும், சன் குழுமத்தின் பிரச்சார பலமில்லாமல் தி.மு.கவின் வால் தேர்தலை எதிர்கொள்வது இயலாதென்றும் மாறன் சகோதரர்கள் மனக்கணக்கு போட்டனர். ஆக, எப்படியாயினும் தங்களை அனுசரித்துப் போவதை தவிர கருணாநிதிக்கு வேறுவழியில்லை என்றமுடிவுக்கு வந்தனர்.
 சன்குழுமத்தின் ஆரம்பம் தொடங்கி அதன் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் கருணாநிதியின் பங்கிருந்தது. அவரது அரவணைப்பு, பண உதவி, அரசியல் பலம்...போன்றவை தங்கள் விஸ்வருப வளர்ச்சிக்கு விதையாய், நீராய் உதவியது என்பதை அளப்பரிய செல்வாதாரமும், சிரமமில்லாமல் கிடைத்த அதிகார பலத்தால் பெற்ற ஆணவமும் சேர்ந்து திரையிட்டு மறைத்தன. ஜெயலலிதா ஆட்சியின் போது, 'கேபிள் டி.வி நெட்வொர்க் தொழிலை இனி அரசே கையாளும்" என சட்டம் கொண்டு வந்த போது அன்றே ஆளுநரைச் சந்தித்து, 'அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என" விண்ணப்பித்தார் கருணாநிதி. ஆயினும் இந்தியப் பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி மற்றும் மாநில முதல்வர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், உலகப் பெரும் பணக்காரர்கள்..... இவர்களோடு தயாநிதிமாறனுக்கு பழகக் கிடைத்த வாய்ப்புகள் அவரை தலை, கால் தெரியாமல் புரட்டிப்போட்டது. தயாநிதியின் கால்கள் யதார்த்தம் என்ற தரையைத் தொடமறுத்தது. மரம் வேரை மறந்தது.


தயாநிதியின் தணியாத பேராசை
 மத்திய தகவல் தொறில் நுட்ப அமைச்சர் பதவியை தங்கள் வணிக விரிவாக்கத்திற்கும் பாதுகாப்பிற்கும் போட்டியாளர்களை பொசுக்குவதற்கும் தயாநிதி தயாங்காமல் பயன்படுத்தினார். அதே சமயம் மிகப்பெரும் தொழில் அதிபர்களிடம் அவர்களது நிறுவனங்களில்- அண்ணன் தயாநிதியையும் பங்குதாரராக சேர்க்கும் படி பகிரங்கமாகக் கேட்டார்.
 ஏர்டெல் நிறுவனத்திலிருந்து 500 செல்போன்களை இலவசமாக சன் குழுமத்திற்கு பெற்றுத்தந்தார். ஸ்டார், விஜய், ராஜ் தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகள். அதற்கான கட்டணங்கள் எஸ்.சி.வி வாடிக்கையாளர்களிடம் வசூலித்த போதும் மேற்படி நிறுவனங்களுக்குத் தருவதில்லை. எஸ்.சி.வியே விருப்பப்பட்டு எப்போதாகிலும் கொடுத்தால் தான் உண்டு. அமைச்சரின் கோபத்திற்கு ஆளாவது தொழிலுக்கே ஆபத்து என அவர்களும் அடங்கிப்போனார்கள்.
 அளப்பரிய செல்வமும் அதிர்ஷ்டமாய் வந்த அதிகார பலமும் மாறன் சகோதரர்களுக்கு மனநிறைவைத் தரவில்லை கருணாநிதியின் அடுத்த தகுதியான வாரிசாக தயாநிதி இருக்க, அதற்குத் தடைக்கற்களாக ஸ்டாலினும், அழகிரியும், கனிமொழியும் இருப்பது தங்கள் லட்சியத்திற்கு இடையூறாக கருதினார்கள்.
 ஓரணியில் ஒன்றாக இருக்கும் ஸ்டாலினையும், அழகிரியையும் பிரிப்பது, இருவரையும் ஒருவருக்கொருவர் எதிரியாய் மாற்றுவது, கருத்துக்கணிப்பின் விளைவாய் அழகிரி ஆதரவாளர்கள் செய்யும் அராஜகங்களை அடிப்படையாக வைத்து அவரது அரசியல் செல்வாக்கை அழிப்பது.... போன்றவையே மாறன் சகோதரர்களின் திட்டம்.
 மதுரை மாவட்டத்தில் எஸ்.சி.வியின் ஏகபோகத்தை தடுத்து சிறு கேபிள் ஆபNரேட்டர்களின் தொழிலுக்கு அரணாக அழகிரி செயல்படுவதும் மாறன் சகோதரர்களின் மட்டற்ற கோபத்திற்கு மற்றொரு காரணமாயிருந்தது.
 மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் உயிர் பலியான பிறகு அழகிரியை சட்டத்திற்கு மீறிய அதிகாரமையமாய் செயல்படுகிறார் என்று மீண்டும், மீண்டும் ஓலமிட்ட சன் தொலைக்காட்சியும், தினகரனும், இத்தனை ஆண்டுகளில் சட்டத்திற்கு அப்பாற்ப்பட்ட அதிகார மையமாக அழகிரி செயல்பட்டு வந்த போது அதை ஒருநாளும் சுட்டிக் காட்டியதில்லை என்பது கவனத்திற்குரியதாகும்.
 அரசியலில் லாபமும், நஷ்டமும் சகஜமே ஆனால் கருணாநிதி தயவால் லாபத்தை மட்;டுமே அனுபவித்து வந்த மாறன் சகோதரர்கள், நஷ்டத்தை கண்டு கதிகலங்கி குமுறி தீர்த்தனர். 'அழகிரியை சிறைக்குள் தள்ளாமல் நாங்கள்ஓப்போவதில்லை..." என மார்த்தட்டினார்கள். அழகிரி ஆதவாளர்கள் செய்தது அக்கிரமமாக இருக்கலாம் ஆனால் அதை எதிர்த்து தர்மவேஷம் கொள்வதற்கு மாறன் சகோதரர்களுக்கு தார்மீக தகுதி இல்லாமல் போய்விட்டது.
 தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் தன்னை கடந்து சென்று தன் மகன் அழகிரியை அழித்தொழிக்க நினைப்பதை தனது இறுதி இலட்சியத்திற்கு விடப்பட்ட அறைகூவலாகத் தான் கருணாநிதி எதிர்க்கொண்டார். தன்னை தவிர தாங்கிப்பிடிக்க ஆளில்லாத தயாநிதிமாறனை அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற அவருக்கு சிறிதளவும் சிரமம் ஏற்படவில்லை. கட்சியின் அனைத்து மட்டத்தினரிடையேயும் மாறன் சகோதரர்கள் குறித்த மனக்கசப்பு மண்டிக்கிடந்தது. அது அவர்கi, கருணாநிதி கைவிட்டபின்பு நிர்வாகக் குழுவில் பொங்கி பிரவகித்தது. மாறன் சகோதரர்களின் வளர்ச்சி கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என தி.மு.க திட்டவட்டமாக தீர்மானித்தது. மாறன் சகோதரர்களின், பேராசை பெருநஷ்டத்தில் முடிந்தது.

கலாநிதியின் கணக்கற்ற தில்லுமுல்லுகள்
 ஜெமினி தொலைக்காட்சியில் ரவிபிரசாத், மனோகர்பிரசாத் என்ற சகோதரர்கள் பங்கு தாரர்கள். இவர்கள் இருவரும் இந்தியன் வங்கியில் ரூ700 கோடி கடன் பெற்று இன்று வரை வட்டி உட்பட கட்டவில்லை. இதை இந்தியன் வங்கி தமிழ் தினசரியில் விளம்பரமாகவே வெளியிட்டது. ஜெமினியில் கலாநிதிமாறனின் பங்கு 56.5 சதவிகிதமாகும். ஜெமினி நல்ல லாபகரமாகவே தொழில் செய்து பணம் ஈட்டுகிறது. இன்ற வரை பிரசாத் சகோதரர்கள் இதன் இயக்குநர்களாகதான் இருக்கிறார்கள். மாறன் சகோதரர்களின் அதிகார செல்வாக்கின் முன்பு சட்டம் தன் கைகளை கட்டிக் கொண்டுவிட்டது. இதே ஜெமினியில் மற்றொரு பங்குதாரராக சேர்ந்து பெரம் பணத்தை முதலீடு செய்து, கடுமையாகப் பாடுபட்டு சேனலை து}க்கி நிறுத்திய சரத் என்ற கலாநிதியின் நண்பர் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
 புதிதாக வரும் திரைப்படங்கள் சன் தொலைக்காட்சிக்குத்தான் விற்கப்படவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். இந்த நிர்பந்தித்திற்கு உடன் படாத திரைப்படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் சன் தொலைக்காட்சியின் 'டாப் 10 மூவிஸ்" திரை விமர்சனத்தில் கடைசி எண் தந்து கண்டபடி தாக்கி விடுகின்றனர்..! போதாக்குறைக்கு தினகரன், குங்குமம் இதழ்களும் குதறி தீர்த்து விடுகின்றன சம்மந்தப்பட்ட திரைப்படத்தை! இந்த ஊடகப் பலத்தை கண்டு மிரளும் தயாரிப்பாளர்கள் சன் குழுமத்திடம் சரணாகதியாகிவிடுகின்றனர்.
 சுமார் 40,000 கோடிக்கு அதிபதியான கலாநிதி மாறன் தன் தந்தை முரசொலிமாறனின் மருத்துவ செலவுக்காக மத்திய அரச செலவிட்ட ரூ 40 கோடியை இன்று வரை திருப்பித்தர மனமில்லாதவராய் இருக்கிறார்.

வாரிசுப்போட்டி வந்தது எதனால்?
 அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு ஜனநாயக இயக்கமாக தொடங்கி நடத்தினார். அவர் தனிப்பெரும் தவைராக அறியப்பட்டநிலையிலும் என்.வி.நடராஜன், இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன் போன்றவற்கு சம மதிப்பளித்து அவர்களை அடுத்த தலைமை தாங்க தக்கவராக ஆயத்தப்படுத்தினார். கருணாநிதியின் திறமைகளையும், ஆற்றல்களையும் அறிந்த அண்ணா அவர் உட்பட எவரையுமே தன் தலைமைக்கு ஆபத்தான தம்பியாக கருதவில்லை.
 எம்.ஜி.ஆரின் செல்வாக்கு தனக்கு ஆபத்தாகிவிடுமோ என அவரை புறக்கணித்தார் கருணாநிதி. கட்சி இரண்டானது. கருணாநிதியின் தலைமையை ஏற்றுக்கொண்டபிறகும் நாவலர் நெடுஞ்செழியனை நல் முறையில் நடத்தவில்லை. அதனால் அவரும் 1977ல் வெளியேறினார். வைகோவின் வளர்ச்சி தன் வாரிசுகளுக்கு ஆபத்த என்று அவரையும் அகற்றினார். இப்படி கருணாநிதியின் குடும்ப உறவுகள் கட்சியில் கோலோச்சமுடியும் என்ற நிலை ஏற்பட்டதால்தான் தயாநிதிமறான் போன்றவர்கள் தான்தோன்றித் தனமாக உயர் நிலைக்கு வரமுடிந்தது. கொள்கை அடிப்படையில் ஒரு இயக்கம் செயல்பட்டால் அங்கே குடும்ப ஆதிக்கம் வராது. அதுவே கொள்ளை அடிப்படையில் செயல்பட்டால் உடைமை உணர்வும், உறவுமனப்போக்கும் மேலோங்கி விடுகின்றது.
 இப்போது கலைஞர் தொலைக்காட்சி ஆகஸ்ட் 15லிருந்து ஒளிபரப்பாகும் என கருணாநிதி அறிவித்துள்ளார். சுமார் 60 சேனல்கள் மூன்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு காத்திருப்ப பட்டியலில் இருக்கும் நிலையில், கருணாநிதி நினைத்தவுடன் ஒரு தொலைக்காட்சியை தொடங்க முடிகிறது. மேலைநாடுகளில், அமெரிக்கா, ஐரோப்பாவில், ஒரே குடும்பத்திலுள்ளவர்கள் அரசியல், ஊடகம் இரண்டிலும் மேலாதிக்கமம் செய்வதை தடுக்கும் சட்டம் ஒன்று உள்ளது. இதை நம் நாட்டிலும் உடனே அமல்படுத்த வேண்டும். அதுவும் கொள்கை அரசியல் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்ட நம் நாட்டில், தன்னல அரசியல் மேலாதிக்கம் உள்ளவர் கைகளிலேயே ஊடக பலமும் இருக்கும் போது அத அவரத சுயநலம் சார்ந்து, தனிநபர் ஆசைகளுக்குட்பட்டதாகி விடுகிறது. பொது நலன் புறக்கணிக்கப்பட்டு, மக்களின் உண்மை அறியும் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களை திசை திருப்பும் தீமைகள் அரங்கேறுவதை தடுக்க இவ்வகைச்சட்டங்கள் அவசியமாகும்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.