ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கதிராமங்கலம் உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கதிராமங்கலம் உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டோர் மருத்துவமனையில்  அனுமதி! 
கதிராமங்கலத்திலிருந்து, மண்ணைப் பாழ்படுத்தும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டுமென்றும், கதிராமங்கலத்துக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், உள்ளிட்ட 10 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், கதிராமங்கலத்தில் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட முருகானந்தம், ராசேந்திரன், கிருட்ணமூர்த்தி ஆகியோர் உடல் நல பாதிப்பு காரணமாக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று (30.07.2017) காலை மருத்துவமனைக்குச் சென்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், மூவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் விடியல், தஞ்சை சீனுவாசன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kannottam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.