ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“பறிபோகும் தமிழர் தாயகம்” மிசொரியில் கருத்தரங்கம்!

“பறிபோகும் தமிழர் தாயகம்” மிசொரியில் கருத்தரங்கம்!
“தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பில், வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
இதன் முதல் கூட்டமாக, அக்டோபர் 26 அன்று மாலை அமெரிக்க நேரடிப்படி மாலை 7 மணியளவில், மிசோரி - செயிண்ட் லூயிஸ் பால்வின் பாயிண்ட் அரங்கில் “பறிபோகும் தமிழர் தாயகம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. “வட அமெரிக்கத் தமிழர்கள்” North American Tamils இக்கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளனர். கூட்டம் குறித்த தொடர்புகளுக்கு +1.314.422.3370 என்ற எண்ணை அழைக்கவும்!
 
இந்நிகழ்வில், அமெரிக்க வாழ் தமிழின உணர்வாளர்கள் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.