ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றங்களில் தொடர்புடைய அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினர் மீது நடவடிக்கை கோரி தஞ்சையில் இன்று (23.03.2019) எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்.

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் மாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் ஆயம் நடுவண்குழு உறுப்பினர் தோழர் ம. லெட்சுமி அம்மா தலைமை தாங்கினார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெரியார் மையம் தோழர் கலா, மாணவிகள் அஞ்சுதம், இரா. வான்மதி, இரா. தேன்மொழி, மகளிர் ஆயத்தோழர்கள் சுவாமிமலை பி. இளவரசி, திருச்சி வெள்ளம்மாள், தஞ்சை வெற்றிச்செல்வி, பூதலூர் ஒன்றியப் பொறுப்பாளர் சி. இராசப்பிரியா, தஞ்சை நகரத் தோழர்கள் அமுதா, இராணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தஞ்சை மகளிர் ஆயம் தோழர் செம்மலர் சிறப்புரையாற்றினார். இறுதியாக மகளிர் ஆயப் பொறுப்பாளர் அ.சுந்தரி நன்றியுரையாற்றினார். திரளான பெண்களும் ஆண்களும் பங்கேற்றனர்.

செய்தித் தொடர்பகம், 
மகளிர் ஆயம்

தொடர்புக்கு: 
7373456737, 9486927540

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.