ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மராட்டியத்தின் நள்ளிரவு மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு பெ. மணியரசன் கண்டனம்!


மராட்டியத்தின் நள்ளிரவு மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!

மராட்டியத்தில் சிவசேனையும் சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரசும் கூட்டணி சேர்ந்து அமைச்சரவை அமைக்க இருந்த நிலையில், தேசியவாதக் காங்கிரசிலிருந்து அஜீத்பவாரை இழுத்து 22.11.2019 – 23.11.2019 நள்ளிரவில் அரசியல் சதித் திட்டத்தை அரங்கேற்றி – ஆளுநருக்குத் தெரிவித்து விடியற்காலை 7.30 மணிக்கு ஆளுநர் பா.ச.க.,வின் பட்னாவிசை முதலமைச்சராகவும், அஜீத்பவாரை துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்கச் செய்த பா.ச.க.,வின் நள்ளிரவு மோசடி வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்த நள்ளிரவு மோசடிக்கு முழுப்பொறுப்பு தலைமை அமைச்சர் நரேந்திரமோடியே! நள்ளிரவு 12 மணிக்கு ஆளுநருக்குத் தெரிவித்து,12.30 மணிக்கு புது தில்லி புறப்பட இருந்தவரைத் தடுத்து விடியற் காலை 5.30 மணிக்கு பட்னாவிசையும் அஜீத்பவாரையும் சந்திக்க வைத்து ஆளுநர் காலை 7.30 மணிக்குப் பதவியேற்பு உறுதி மொழி செய்து வைக்க நடுவண் அரசே ஏற்பாடு செய்துள்ளது. இவ்வளவு நள்ளிரவு வேலைகளும் தலைமை அமைச்சர் ஏற்பாடில்லாமல் நடக்க முடியாது.

சட்டவிரோத அமைச்சரவை 7.30 மணிக்குப் பதவி ஏற்கிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் 8.40 மணிக்கு மோடி டிவிட்டர் வழியாக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். மோடியிடம் இட்லர் தோற்றுப்போனார்.

சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக நள்ளிரவு சதியில் உருவாக்கப்பட்ட அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து செய்தி அனுப்பியிருப்பது. கொடுமையிலும், கொடுமை.

நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவில் இனி சட்டத்தின் ஆட்சி நடக்குமா, அடுத்த மக்களவைத் தேர்தல் நடக்குமா என்ற கேள்விகள் எழுகின்றன. பா.ச.க. தலைமைக்கு அரசியல் ஒழுக்கமில்லை. சனநாயகத்தின் மீதும் அரசமைப்பச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.

இப்படிபட்ட பா.ச.க.,வைத் தமிழ்நாட்டில் வளர்க்கலாமா என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.