ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழின வரலாற்றில் தடம் பதித்தவர் மன்னர்மன்னன் பாரதிதாசன்! பெ. மணியரசன் இரங்கல்!


பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகன் மன்னர்மன்னன், பாவேந்தரின் தொடர் அடையாளமாய் வாழ்ந்தவர். பாவேந்தர் வரலாற்று நூலும் பல்வேறு இலக்கிய நூல்களும் எழுதியவர். பாவேந்தருக்கு இருந்த பரந்த செல்வாக்கு மண்டலத்துடன், தொடர்ந்து தொடர்பு வைத்து உயிரோட்டமாக பாவேந்தரின் தொடர்ச்சியை எடுத்துச் சென்றவர்.
தமிழ் – தமிழினம் இரண்டுக்கும் முதன்மை கொடுத்து சிந்தித்தவர்; செயல்பட்டவர். தன் மகனுக்கு கோபதி என்று இருந்த பெயரை மன்னர்மன்னன் என்று தூயதமிழாக்கியவர் பாவேந்தர். அதன்பிறகு, தமிழ் கூறும் நல்லுலகில் மன்னர்மன்னன் என்று பெயர் வைப்பது இயல்பாயிற்று!
இவ்வாறு, பல்வேறு வகைகளில், தமிழின வரலாற்றில் தடம் பதித்த மன்னர்மன்னன் அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. ஐயா அவர்களின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.