ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

செங்கிப்பட்டியில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!

இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.


தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் சாணூரப்பட்டி முதன்மைச் சாலையில், 12.08.2014 அன்று மாலை நடைபெற்ற ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்ட’த்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ.தேவதாசு தலைமையேற்றார்.

த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் ச.காமராசு, தோழர் தட்சிணாமூர்த்தி, தோழர் க.அருள்தாசு, தோழர் ஆ.இராசசேகர், தோழர் பொன்.இரவிச்சந்திரன், தோழர் த.செபஸ்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திரு. இறைநெறி இமையவன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் ப.மலைத்தேவன் நன்றியுரையாற்றினார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.