ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரிச் சிக்கலைத் தீர்க்க பிரதமர் தலையிட மாட்டார் - நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். பெ. மணியரசன் விடையளிக்கிறார்!

காவிரிச் சிக்கலைத் தீர்க்க பிரதமர் தலையிட மாட்டார் - நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.  தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்!
கேள்வி :

கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கும் காவிரிச் சிக்கலில் பிரதமர் தலையிடமாட்டர் என்று நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளாரே?

பதில் :

தஞ்சாவூர் அஞ்சலகத்தில் கங்கை நீர் விற்பதற்குத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலையிடுவார். ஆனால், தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் சட்டப்படி தலையிட வேண்டிய பிரதமர் தலையிடமாட்டாரா?
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ள காவிரிச் சிக்கலைத் தீர்க்க பிரதமர் தலையிட மாட்டார் என்றால் ஐ.நா. பொதுச் செயலாளர் தலையிட வேண்டும் என்கிறாரோ நிர்மலா?

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.