ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியப் போர் வாளாக வெளிவரும்...தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழை ....இனி நூல் வடிவிலேயே படிக்க புதிய வசதி..!

தமிழ்த்தேசியப் போர் வாளாக வெளிவரும்...தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழை ....இனி நூல் வடிவிலேயே படிக்க புதிய வசதி..!
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்த்தேசிய இனத்தின் சிக்கல்களை தீர்வுகளோடு அலசும் - தமிழ்த்தேசியப் போர் வாளாக வெளிவந்து கொண்டுள்ள “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - மாதமிமுறை இதழ்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களை ஆசிரியராகக் கொண்டும், பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களை இணை ஆசிரியராகக் கொண்டும், சீரிய கருத்துகளோடு கருத்தியல் களத்தில் போர் புரியும் தமிழர் இதழாக தமிழர் கண்ணோட்டம் வெளி வந்து கொண்டுள்ளது.

இவ்விதழை, ஆன்ட்ராய்டு கைப்பேசி - டேப்லட்டு - மடிக்கணினி உள்ளிட்ட நவீன மின்னணு சாதனங்களில் நூல் வடிவிலேயே படிப்பதற்கான புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கண்ணோட்டம் இணைய இதழான www.kannotam.com தளத்திற்குச் சென்று, “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழ்களை இனி, நூல் வடிவிலேயே படிக்கலாம்.

தமிழர் கண்ணோட்டம் இதழை தங்கள் இல்லத்திற்கு வரவைக்க, உறுப்பியம் (சந்தா) செலுத்துவதற்கான ஆன்லைன் வசதியும் இதே இணையத்தில் செய்யப்பட்டுள்ளது. உறுப்பியம் செலுத்தி, அனைவரது இல்லங்களிலும் - அலுவலகங்களிலும் தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பரப்பும் போர் வாளாக “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழை இடம்பெறச் செய்யுங்கள்.

நமக்கான ஊடகத்தை நாமே வலுப்படுத்தி கொண்டு செல்வோம்! தமிழர்களின் குரலை உலகிற்குச் சொல்வோம்!

பார்க்க: www.KANNOTAM.com

கண்ணோட்டம் இணைய இதழ்
ஊடகம்:www.kannotam.com
பேச: 7667077075, 9047162164

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.