ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"பெண்ணுரிமையும் மண்ணுரிமையும்" தஞ்சையில் மகளிர் நாள் கருத்தரங்கு!

"பெண்ணுரிமையும் மண்ணுரிமையும்" தஞ்சையில் மகளிர் நாள் கருத்தரங்கு!
அனைத்துலக மகளிர் நாளை முன்னிட்டு, தஞ்சையில் வரும் 11.03.2017 அன்று, மகளிர் ஆயம் சார்பில், “பெண்ணுரிமையும் மண்ணுரிமையும்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

போராளித் தோழர் புதுமொழி (எ) ஜன்னா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான 11.03.2017 அன்று, தஞ்சை பெசண்ட் அரங்கில் மாலை 4.30 மணிக்கு - தோழர் ஜன்ன நினைவரங்கில் நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி தலைமை தாங்குகிறார். தோழர் சே. அமுதா வரவேற்புரையாற்ற, தோழர் சி. இராசப்பிரியா தொடக்கவுரையாற்றுகிறார்.

மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு திருமதி. சித்ரா செயராமன், தோழர் செம்மலர் ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்துகின்றனர். பாவலர்கள் இரா.பெ. வெற்றிச்செல்வி, ந. பாவேந்தி, செ. தமிழினி ஆகியோர் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கருத்தரங்கை நிறைவு செய்து சிறப்புரையாற்றுகிறார். தோழர் இரா. யமுனாராணி நன்றி கூறுகிறார்.

இக்கருத்தரங்கில், தமிழின உணர்வாளர்கள் திரளாகக் கலந்து கொள்ள அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.

தொடர்புக்கு:
7373456737, 9486927540
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.