ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அபுதாபியில் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்!

அபுதாபியில் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அபுதாபி கிளை சார்பில், இன்று (15.09.2017) காலை, அபுதாபியில், தமிழர் கல்வி உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
அபுதாபி - பனியாஸ், முஸ்த்தப்பா உழைப்பாளி கிராமத்தில், தமிழ்நாட்டிலிருந்து அபுதாபி சென்று பணிபுரியும் தமிழர்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர் செயலாளர் தோழர் கார்த்திக் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் தோழர் ருபன் கினிஸ்ட்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
இந்திய அரசே! தமிழர் இன உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வைக் கைவிடு! தமிழினத்தை வஞ்சிக்காதே!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.