ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா!

ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா!

இந்திய மருத்துவக் கழகம் தொடங்கப்படுவதற்கு - இருபதாண்டுகளுக்கு முன்பேயே தமிழ்நாட்டில் மருத்துவக் கழகம் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மருத்துவத் தலைநகராக விளங்கும் அளவிற்கு, மருத்துவத்தில் தமிழ்நாடே சிறந்து விளங்கியது.

இவற்றையெல்லாம் முறியடித்து, தமிழர்களை தற்குறிகளாக மாற்ற வேண்டுமென்ற ஆரிய இனவெறி வன்மத்தோடுதான் - தமிழ்நாட்டின் மீது மிக வன்மையாக “நீட்” தேர்வு வலிந்து திணிக்கப்பட்டது. 2017 சனவரி மாத இறுதியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாட்டின் “நீட்” சட்டத்திற்கு, இந்திய அரசு ஒப்புதல் அளிக்காததற்கான காரணம் - ஆரிய இனவெறிப் பகையே அன்றி வேறல்ல!

இந்த இனப்பகையின் களபலியாகத்தான் அரியலூர் மாணவி தங்கை அனிதா, “பாரத மாதா” பலி பீடத்தில் காவு கொடுக்கப்பட்டார். இந்த உண்மையை, இனியாவது உரக்கப் பேசுவோம்!



நேற்று (02.09.2017) மாலை, அரியலூர் குழுமூர் கிராமத்தில் நடைபெற்ற அனிதாவின் இறுதி வணக்க நிகழ்வில், பல்வேறு கட்சி - இயக்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும், பொது மக்களும் உணர்ச்சிப் பெருக்கோடு பங்கேற்றனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் தலைமையில் பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்!
அனிதாவைக் காவ வாங்கிய ஆரியத்தை பழிதீர்ப்போம்!
ஆரிய இந்தியாவின் இனப்பகையை முறியடிப்போம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.