ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்!

மதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்!
 
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் செலுத்தும் - மாவீரர் நாளான நாளை ( 27.11.2017 ) மாலை, மதுரையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஒன்றுகூடல் நடைபெறுகிறது.

மதுரை சிம்மக்கல் அருகிலுள்ள ஆறுமுச்சந்தியில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு தலைமை தாங்குகிறார்.

தமிழின உணர்வாளர்களும், பல்வேறு அமைப்பினரும் பங்கேற்று தமிழீழ மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்!


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.