ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி பேரியக்கத்தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது!

காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி பேரியக்கத்  தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது!
காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்க செயலாளர் தோழர் க. விசயன், தோழர் முருகேசன் ஆகியோரை, தமிழகக் காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

காவிரிச் சிக்கிலில் தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் நேற்று (17.02.2018) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் தருமபுரி இந்திய அரசுத் தொலைப்பேசித் தொடர்பகம் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்ட தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்க செயலாளர் தோழர் க. விசயன், தோழர் முருகேசன் ஆகியோர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் படத்தை எரித்ததாகக் குற்றம் சாட்டி நேற்று நள்ளிரவில் தருமபுரி பி-1- காவல் நிலையக் காவலர்களால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டனர்.

பாரதிபுரத்திலுள்ள தோழர் விசயனின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்ததுடன், மண்ணாடிப்பட்டிலுள்ள தோழர் முருகேசனையும் கைது செய்தனர். இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 147, 188, 290, 293, 285 ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது காவல் நிலையத்தில் சிறையிலுள்ள இவ்விருவரையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து இன்று அதிகாலை நேரில் சந்தித்தார். இருவரையும் நீதிபதி முன் நேர்நிறுத்தி சேலம் சிறையில் அடைக்கப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.