ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஏழு தமிழர் விடுதலைக்காக எழுச்சி பெற்ற தமிழ்நாடு..!


ஏழு தமிழர் விடுதலைக்காக எழுச்சி பெற்ற தமிழ்நாடு..!

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி ஆறு மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்!

இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பல்வேறு ஊர்களில் மக்கள்சந்திப்பு இயக்கத்தை நடத்தினார்.அதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தோழர்களும் பங்கேற்றனர்.

அதில் தீர்மானித்தபடி, இன்று (மார்ச் 9, 2019) மாலை சென்னை, கோவை, மதுரை,திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய நகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

திருச்சி
திருச்சியில் தொடர்வண்டி சந்திப்பு நிலையம் அருகில் உள்ள ஆர்.சி. பள்ளி சாலையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் பல்வேறு அமைப்பினரும் தோழர்களும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழுத் தோழர்கள் நா. வைகறை, செயபால், லெட்சுமி அம்மாள், திருச்சி மாநகரச் செயலாளர் வே.க. இலக்குவன், தஞ்சை மாநகரச் செயலாளர் இலெ. இராமசாமி, பூதலூர் ஒன்றியப் செயலாளர் பி. தென்னவன், திருவெறும்பூர் செயலாளர் தியாகராசன், விராலிமலை செயலாளர் வே.பூ. இராமராசு, பொதுக்குழு தோழர்கள் மூ.த. கவித்துவன், இராசாரகுநாதன், இனியன், குடந்தை தீந்தமிழன், வெள்ளம்மாள் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

சென்னை

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் தி. வேல்முருகன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி இராமதாசு, மே 17 இயக்கப் பொறுப்பாளர் பிரவின், தமிழ்த்தேச மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குனர் மு. களஞ்சியம், தமிழ்ப்பேரரசுக் கட்சித் தலைவர் இயக்குனர் வ. கௌதமன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பேரியக்கப் பொதுக்குழு தோழர்கள் பழ. நல். ஆறுமுகம், வி. கோவேந்தன், வெற்றித்தமிழன், முழுநிலவன், இளங்குமரன், வடசென்னை செயலாளர் செந்தில், தென்சென்னை செயலாளர் கவியரசன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

புதுச்சேரி
புதுச்சேரி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் அய்யப்பன், மக்கள் உரிமை கூட்டமைப்பு தோழர் சுகுமாறன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி, புதுச்சேரிச் செயலாளர் தோழர் இரா. வேல்சாமி, தோழர்கள் பட்டாபி, சத்தியமூர்த்தி உள்ளிட்ட பேரியக்க தோழர்கள் பங்கேற்றனர்.

மதுரை
 மதுரையில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, அம்மா மக்கள்முன்னேற்றக் கழகம், இயக்குநர் அமீர், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொருளாளர் ஆனந்தன், மதுரை மாநகர்செயலாளர் தோழர் இராசு, பொதுக் குழுஉறுப்பினர் கதிர் நிலவன், தோழர்கள் புருசோத்தமன், கருப்பையா, கரிகாலன்,அழகர்சாமி, வழக்கறிஞர் அருணாசலம், தி.கருப்பையா, ஓசுர் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை செம்பரிதி, மகளிர்ஆயம் ஒருங்கிணைப்பாளர் அருணா, செரபினா, மேரி, சந்திரா, இளமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெல்லை
நெல்லையில் வ. உ. சி. திடல் அருகில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 'வான்முகில்' வழக்கறிஞர் ம. பிரிட்டோ, நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர் ராம்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர் கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் மு. தமிழ்மணி, புளியங்குடி செயலாளர் க. பாண்டியன், தோழர்கள் சிவா, விஜயநாராயணன் உள்ளிட்ட பேரியக்க தோழர்கள் பங்கேற்றனர்.

கோவை
கோவையில் தமிழ்நாடு ஹோட்டல் எதிரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கோவை கு. இராமகிருட்டிணன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தோழர் உ. தனியரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இராசேசு, திருவள்ளுவன் உள்ளிட்டத் தோழர்கள் பங்கேற்றனர்.

சேலம்

சேலத்தில் அண்ணா சிலை அருகில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் பேரறிவாளன் தந்தையார் திரு. குயில்தாசன், திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர் டேவிட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் காஜா மைதீன், நாம் தமிழர் கட்சி தங்கதுரை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

பேரியக்கத் தோழர்கள் பிந்துசாரன், பொதுக்குழு உறுப்பினர் வெ. இளங்கோவன், தோழர்கள் வெண்ணந்தூர் சேகர், ஈரோடு சரவணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

#28YearsEnoughGovernor
#அநீதியே28ஆண்டுகள்போதாதா

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.