ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சுருங்கி வரும் ஜனநாயகம் குறித்தான பொது உரையாடல்!

சுருங்கி வரும் ஜனநாயகம் குறித்தான பொது உரையாடல்!


“மனித உரிமைப் போராளி” - வழக்குரைஞர் பி.வி. பக்தவச்சலம் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வாக, நாளை (02.09.2017) “சுருங்கி வரும் ஜனநாயகம் குறித்தான பொது உரையாடல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

பி.வி.பி. அறக்கட்டளை மற்றும் மக்கள் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகளின் சார்பில், நாளை (02.09.2017) காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரியின் இலாரன்சு சுந்தரம் அரங்கில் நடைபெறும் இக்கருத்தரங்குக்கு, மக்கள் கண்காணிப்பகம் செயல் இயக்குநர் - வழக்கறிஞர் ஹென்றி திபேன் தலைமை தாங்குகிறார்.

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன் (பி.சி.ப. அறக்கட்டளை) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வழக்கறிஞர் அஜிதா அறிமுக உரையாற்ற, ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி து. அரிபரந்தாமன் தொடக்க உரையாற்றுகிறார்.

நிகழ்வில், பல்வேறு கட்சி - இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் கருத்துரையாற்றுகின்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் உரையாற்றுகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.