ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தஞ்சையில் குடிநீர் வழங்காத ஊராட்சியைக் கண்டித்து மறியல்!

தஞ்சையில் குடிநீர் வழங்காத ஊராட்சியைக் கண்டித்து மறியல்!

தஞ்சாவூர் மாநகரத்தை ஒட்டியுள்ள, நீலகிரி ஊராட்சி கலைஞர் நகரில் கடந்த ஆறு மாதமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் துணையுடன் மகளிர் ஆயம் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டது. அதிகாரிகளை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது.
எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று (16.10.2017) காலை, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான தோழர் ம. இலட்சுமி அம்மா தலைமையில் அப்பகுதி மகளிர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறைனர் ஊராட்சி அலுவலரிடம் பேசி கலைஞர் நகர் இரண்டாம் தெரு மற்றும் சில பகுதிகளில் அன்றாடம் தட்டுபாடு இல்லாமல் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
போராட்டத்தில், மகளிர் ஆயம் தோழர்கள் விவேகா, கோகிலா, பானுமதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை உள்ளிட்டோரும் பொது மக்களும் பங்கேற்றனர்.

மகளிர் தோழர்களுக்கு வாழ்த்துகள்!

செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.

தொடர்புக்கு:
7373456737, 9486927540
https://www.facebook.com/makaliraayam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.